‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அடுத்த ட்விஸ்டு – கோபி, ராதிகாவுடன் பழகுவதை கண்டுபிடிக்கும் எழில்?
விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் பெரிய எதிர்பார்ப்புகளை உருவாக்கி வழக்கம் போல கோபிக்கு சாதகமாக முடிந்த கதைக்களத்தில், கோபியுடன் பழகுவது ராதிகா என்ற உண்மையை எழில் கண்டுபிடிக்க வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.
பாக்கியலட்சுமி சீரியல்:
ஒவ்வொரு நாளும் விறுவிறுப்புக்கும், ஸ்வாரசியத்திற்கும் பஞ்சமே இல்லாமல் ஒளிபரப்பாகி கொண்டிருக்க கூடிய ஒரு சீரியல் ‘பாக்கியலட்சுமி’. இந்த சீரியலை பொருத்தளவுக்கு, ரசிகர்கள் அனைவரும் ஒருசேர எதிர்பார்த்து வருவது கோபி எப்போது மாட்டுவார் என்பதை தான். அந்த வகையில் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் தனது மனைவி உட்பட குடும்பத்தில் உள்ள யாருக்கும் தெரியாமல் தனது காதலி ராதிகாவுடன் ஊர் சுற்றி வரும் கோபி அவரை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்திருக்கிறார். இந்த உண்மையை தெரிந்து கொண்ட கோபியின் அப்பா ராமமூர்த்தி மற்றும் மகன் எழில் இருவரும் ஒன்றும் செய்ய முடியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர்.
மீண்டும் குழந்தை பெற்றுக் கொள்ளும் ‘ராஜா ராணி 2’ ஆல்யா மனசா – அவரே சொன்ன தகவல்! ரசிகர்கள் உற்சாகம்!
இதற்கிடையில் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் அவ்வப்போது ராதிகாவின் வீடு, கோவில், மருத்துவமனை, பிக்னிக் என்று பாக்கியாவிடம் கோபி மாட்டும் சந்தர்ப்பங்கள் காட்டப்பட்டு இருந்தாலும், ஒரு முறை கூட இந்த நல்ல சம்பவம் கைகூடாமால் போகிறது. இதற்கு பாக்கியாவின் அப்பாவித்தனமும், கண் மூடித்தனமான நம்பிக்கையும் ஒரு காரணம் ஆகும். இப்படியே கதை நகர்ந்து கொண்டிருக்க இந்த கோபி எப்போது தான் பாக்கியாவிடம் மாட்டுவார் என்று ரசிகர்கள் புலம்பி தீர்த்து வருகின்றனர். இப்போது, ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் ஒளிபரப்பாகி வரும் எபிசோடில் கோபியை ஒரு பெண்ணுடன் பார்த்த எழில் அவரை மிரட்டி விட்டு, பிறகு தாத்தாவிடம் இதை பற்றி சொல்லி வருத்தப்படுகிறார்.
இதனை கேட்டதும் கோபியின் நடவடிக்கைக்கு முடிவு கட்ட வேண்டும் என எண்ணிக்கொண்டு பாக்கியா, கோபியின் புகைப்படத்தை எடுத்துக்கொண்டு ராதிகாவின் வீட்டுக்கு கிளம்புகிறார் ராமமூர்த்தி. ஆனால், இவர் ராதிகாவின் வீட்டை நெருங்கும் முன் கோபி ராதிகாவின் வீட்டை காலி செய்து விட்டு வேறு இடத்திற்கு கூட்டி செல்கிறார். பிறகு, பாக்கியா ராமமூர்த்தியை அழைத்து கொண்டு வீட்டுக்கு வருகிறார். இந்த இடத்தில் பாக்கியா, கோபியின் புகைப்படத்தை பார்க்கும் எழில் அதற்கு பின்பு தாத்தாவிடம் இது குறித்து பேச வரும் போது அவர் டென்ஷனாக ஆரம்பிக்க, அப்படியே அந்த கதையை விட்டு விட்டு செல்கிறார் எழில்.
இந்த காட்சிகள் நிமித்தம் எதையெதையோ எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு எழில் உண்மையை கண்டுபிடிக்காமல் சென்றது சற்று ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. மற்றபடி, தாத்தா வாக்கிங் சென்று தான் விழுந்து விட்டார் என்று பாக்கியா உட்பட வீட்டில் உள்ள அனைவரும் ஆணித்தரமாக கூறுகின்றனர். மறுபக்கத்தில், ஒருவேளை ராமமூர்த்தி ராதிகாவின் வீட்டுக்கு சென்றிருப்பாரோ என்ற சந்தேகம் கோபிக்கு ஏற்படுகிறது. இதை வைத்து பார்க்கும் போது மீண்டும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் கதை கோபிக்கே சாதகமாக இருக்கிறது என்றும் அவர் இப்போதைக்கு யாரிடமும் மாட்டப்போவதில்லை என்பதும் தெளிவாகிறது. இருப்பினும் எழில், இந்த விஷயத்தை ஆராய்ந்து கோபி, ராதிகாவுடன் பழகுவதை கண்டுபிடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.