மீண்டும் குழந்தை பெற்றுக் கொள்ளும் ‘ராஜா ராணி 2’ ஆல்யா மனசா – அவரே சொன்ன தகவல்! ரசிகர்கள் உற்சாகம்!
தமிழ் சின்னத்திரையில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்த ஆலியா மனசாவிற்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில், பிரசவ காலத்தில் பல சலுகைகள் கொடுப்பதால் அவர் மூன்றாவது கூட பெற்றுக் கொள்ளலாம் என சொன்ன வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
நடிகை ஆலியா மானசா:
சின்னத்திரை சீரியல்கள் அனைத்துமே மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெரும் அந்த வகையில் விஜய் டிவி சீரியல்களுக்கு தனி மவுசு இருக்கிறது. இந்நிலையில் விஜய் டிவி ராஜா ராணி 2 சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகை ஆலியா மானசா. நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின் நடிப்புத்துறைக்கு வந்த அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். அவர் மட்டுமில்லாமல் அவரது கணவர் குழந்தை மாமியார் என அனைவரும் ட்ரெண்டிங்கில் இருக்கின்றனர்.
இந்நிலையில் ஆலியாவிற்கு முதலில் ஐலா என்ற மகள் இருக்கிறாள். அவருக்கு தற்போது இரண்டு வயது ஆன நிலையில், ஆலியா இரண்டாவது முறை கர்ப்பமாக இருந்தார். அவருக்கு சில நாட்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது. ஆலியாவின் மகனின் புகைப்படம் மற்றும் வீடியோ பிறந்த அன்றே சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆனது. பலர் அந்த அழகான ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர். ஆலியாவின் மகனிற்கு அர்ஷ் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
ஆலியா பிரசவ காலத்தில் கொடுத்த வீடியோ ஒன்று தற்போது ட்ரெண்டாகி இருக்கிறது. அதில் அவருடைய மாமியார் உடன் இணைந்து பல தகவல்களை அவர் சொல்லி இருக்கிறார். அதில் கர்ப்பமாக இருக்கும் போது பல சலுகைகள் கிடைக்கும் அதுக்காகவே மறுபடியும் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என சொல்லி இருக்கிறார். ஒரு நடிகையாக இருந்தும் கூட குடும்பத்தின் மீது அவர் வைத்துள்ள பாசத்தை பார்த்து ஏகப்பட்டவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கின்றனர்.