மறுவீடு சென்ற இடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விக்னேஷ் சிவன் & நயன்தாரா – எதற்காக தெரியுமா?
விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் திருமணம் முடிந்த கையோடு மறுவீடு சென்றுள்ளனர். மறுவீடு சென்ற இடத்தில் இருவரும் கருத்து வேறுபாட்டின் காரணமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
விக்னேஷ் சிவன் & நயன்தாரா
விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் 7 ஆண்டுகள் காதலுக்கு பிறகு தற்போது தான் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் கடந்த ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள பிரபல ஸ்டார் ஹோட்டல் நடைபெற்றது. இவர்களின் திருமணத்தில் பாலிவுட் நடிகர்களில் இருந்து பலரும் கலந்து கொண்டனர். திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு ஏகப்பட்ட விதிமுறைகளும் விதிக்கப்பட்டிருந்தது. அதாவது மணமக்களை யாருமே மொபைல் போனில் படமெடுக்க கூடாது என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இயக்குனர் கெளதம் மேனன் இவர்களின் திருமணத்தை படமாக இயற்றியுள்ளார். இது மட்டுமல்லாமல் இந்த படத்தை நெட்பிளிஸ் நிறுவனம் ரூ.25 கோடிக்கு வாங்கியுள்ளது.
Exams Daily Mobile App Download
திருமணம் முடிந்ததுமே விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவருமே மிகவும் விலைமதிப்புள்ள பொருட்களை பரிசாக வழங்கி கொண்டனர். அதாவது ரூ.25 கோடி மதிப்புள்ள பங்களாவை நயன்தாரா விக்னேஷ் சிவனுக்கு பரிசாக வழங்கியுள்ளார். மேலும், திருமணத்தில் நயன்தாரா போட்டிருந்த அனைத்து வைர நகைகளுமே நயன்தாராவிற்கு விக்னேஷ் சிவன் கொடுத்த பரிசு தான். விக்னேஷ் சிவன் வெறும் நான்கு திரைப்படங்களை இயற்றிவிட்டு எப்படி இவ்வளவு கோடிக்கு பரிசு கொடுக்க முடியும். கண்டிப்பாக நயன்தாராவின் காசில் தான் அனைத்தையும் வாங்கியிருப்பார் என ரசிகர்களின் மத்தியில் பேச்சு ஈடுபட்டு வருகிறது.
திருமணம் முடிந்த கையோடு இருவரும் அனைத்து பிரபலங்களின் வீட்டிலும் விருந்து சாப்பிட்டு கொண்டிருக்கின்றனர். திருமணத்திற்கு முன்பே துபாயில் நயன்தாரா பல கோடி முதலீடு செய்திருந்தார். அந்த முதலீட்டில் தன்னையும் ஒரு பாட்னராக சேர்த்துக்கொள்ளுமாறு விக்னேஷ் சிவன் கேட்க நயன்தாரா பார்த்துக்கொள்ளலாம் என கூறியிருக்கிறார். தற்போது மறுவீடு சென்ற போது மறுபடியும் இது பற்றி நயன்தாராவிடம் விக்னேஷ் சிவன் கேட்டிருக்கிறார். ஆனால், நயன்தாரா முடியாது என்று கூறியதும் இருவரும் பயங்கர வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுளளது.