தனது முடிவில் பிடிவாதமாக இருக்கும் கதிர், வெளியே போக சொன்ன தனம் – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் அடுத்து வருபவை!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் வீட்டில் நடந்த பிரச்சனையால் கதிர் வீட்டை விட்டு வெளியே செல்கிறார். அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் மூர்த்திக்கு நெஞ்சுவலி வருகிறது. இந்த விஷயத்தை கேட்டு கதிர் மருத்துவமனைக்கு வந்து பார்க்க தனம் அவரை வீட்டிற்கு வர சொல்கிறார். இதெல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் கூட்டு குடும்பமாக சந்தோசமாக இருந்த வீட்டில் பெரிய பிரச்சனை வந்துள்ளது. குடும்பத்தில் பெரிய சண்டை வர மீனாவின் அப்பா, முல்லையின் அம்மா, தனத்தின் அம்மா என மாறி மாறி சண்டை போடுகின்றனர். அதனால் குடும்பத்தில் விரிசல் ஏற்படுகிறது. கதிர் முல்லை டிரீட்மென்ட் செலவிற்காக வாங்கிய பணத்தை கொடுத்துவிட்டு தான் வீட்டிற்கு வருவேன் என சொல்ல அதனால் குடும்பத்தில் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
Exams Daily Mobile App Download
தனம், ஜீவா, கண்ணன் மற்றும் மூர்த்தி என அனைவரும் தடுத்து கூட ஆனால் கதிர் தன்னுடைய முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. முல்லை எடுத்து சொல்லி கூட கதிர் தன்னுடைய முடிவில் பிடிவாதமாக இருக்கிறார். இதற்கிடையே கதிர் போன சோகத்தில் மூர்த்தி மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறார். அதனால் அவருக்கு நெஞ்சுவலி வருகிறது. அவரை ஜீவா தனம் மருத்துவமனையில் சேர்க்க அவருக்கு உடனே ஆப்ரேசன் செய்ய வேண்டும் என சொல்கிறார்.
அழுது கொண்டே வீடியோ வெளியிட்ட “பாக்கியலட்சுமி” ராதிகா – காரணம் இதுவா? ரசிகர்கள் ஷாக்!
இதற்கிடையே கதிருக்கு கண்ணன் தகவல் சொல்கிறார். அதை கேட்டு கதிர் பதறி அடித்துக் கொண்டு வர தனத்திடம் எல்லா பிரச்சனைக்கும் நான் தான் காரணம் என சொல்கிறார். நீ வீட்டிற்கு வருகிறேன் என சொல்லு எல்லாம் சரியாகிவிடும் என தனம் சொல்ல ஆனால் கதிர் தன்னுடைய முடிவில் பிடிவாதமாக இருக்கிறார். அதனால் தனம் அப்போ எதற்கு இங்கே வந்தாய் வெளியே போ என சொல்கிறார். ஜீவா இவனை போக சொல் என தனம் கண்ணீருடன் சொல்கிறார்.