பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்து நிரூப் வெளியிட்ட வீடியோ – ரசிகர்கள் கேள்விக்கு பதில்!
விஜய் டிவி “பிக்பாஸ் அல்டிமேட்” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் நிரூப், அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்ததும் தன்னுடைய ரசிகர்களுக்கு லைவில் பல கேள்விகளுக்கு பதில் அளித்து இருக்கிறார்.
பிக்பாஸ் நிரூப்:
தமிழ் சின்னத்திரையில் மாறுபட்ட ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் 18 போட்டியாளர்களில் ஒருவராக களமிறங்கியவர் தான் நிரூப். அவர் நடிகை யாஷிகா ஆனந்தின் தோழர். யாஷிகா மூலமாக தான் அவருக்கு பிக்பாஸ் வீட்டிற்குள் வர வாய்ப்பு கிடைத்தது என அவரே ஒரு இடத்தில் சொல்லி இருக்கிறார். முதலில் நிரூப் உயரத்தை பார்த்து பயந்த பலர் அவருடைய குழந்தைத்தனமான நடவடிக்கையை பார்த்து ரசிகர்களாக மாறினார்கள்.
இரட்டை கருவை சுமந்து கொண்டிருக்கும் முல்லை – ஆச்சரியத்தில் கதிர்! குஷியில் ரசிகர்கள்!
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பிரியங்கா நிரூப் இடையே அழகான நட்பு காட்டப்பட்டது. ஆனால் அதன் பின் சில சண்டைகள் காரணமாக இருவருக்கும் கருத்து வேறுபாடு காட்டப்பட்டது. இந்நிலையில் பிக்பாஸ் அல்டிமேட் என்ற புதிய நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. அதில் நிரூப் கலந்து கொண்டார். அவரும் அனிதா தாமரை பாலா என நட்பாக பழகி வந்தனர். இவர்களின் நட்பு ரசிகர்களின் மத்தியில் பெரிதும் பேசப்பட்டது. இந்நிலையில் நிரூப் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பின் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து இருக்கிறார்.
அதில் பாலா உடன் சண்டைபற்றி கேட்டதற்கு பாலா இன்னும் பேசவில்லை அவனை பேச சொல்லுங்கள் என சொல்லி இருக்கிறார். பின் பிரியங்கா உடன் தெரியாமல் சண்டை போட்டு விட்டேன் என சொல்ல, அனிதா பற்றி கேட்டதற்கு அனிதா இங்கே தான் இருக்கிறாள் என சொல்லி இருக்கிறார். மேலும் சுருதி பற்றி கேட்டதற்கு அவள் குடும்பத்தை பற்றி பல விஷயங்கள் பேசுவாள் என சொல்லி இருக்கிறார். பின் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பின் தற்போது சிறிது சிறிதாக இயல்பு வாழ்க்கைக்கு வந்துள்ளதாக சொல்லி இருக்கிறார்.