TNPSC நிர்வாக அதிகாரி பதவியில் காலியிடங்கள் – விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்!
தமிழகத்தில் நிர்வாக அதிகாரி பதவியில் காலியாக இருக்கும் சில இடங்களுக்கு TNPSC தேர்வாணையம் ஆட்சேர்ப்பு நடத்த இருக்கும் நிலையில், விண்ணப்பங்களை செலுத்துவதற்கான கடைசி தேதி ஜூன் 18 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
TNPSC தேர்வு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) இந்து சமய மற்றும் அறநிலையத்துறை கீழ்நிலைப் பணிகளின் கீழ், செயல் அலுவலர் பதவிக்கான ஆட்சேர்ப்புகளை நடத்த இருக்கிறது. அந்த வகையில் மொத்தம் 36 காலியிடங்களுக்கு நடத்தப்பட இருக்கும் போட்டித்தேர்வில் கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் இன்றைக்குள் (ஜூன் 18) தங்களது ஆன்லைன் விண்ணப்ப படிவங்களை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது, இந்தந்த காலியிடங்களுக்கான விண்ணப்பங்கள் இன்று (ஜூன் 18) வரை வரவேற்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
முதலாவதாக TNPSC நிர்வாக அதிகாரி காலியிடங்களுக்கு கடந்த மே 20ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. இப்போது இந்த காலியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்று (ஜூன் 18) முடிவுக்கு வருகிறது. இப்போது செயல் அலுவலர் பதவிக்கான விண்ணப்ப செயல்முறைகள், தேர்வு தேதி, விண்ணப்பக் கட்டணம் ஆகிய விவரங்களை இப்பதிவில் விரிவாக காணலாம்.
இந்தியாவில் மீண்டும் பரவும் கொரோனா வைரஸ் – நேற்று மட்டும் 13 ஆயிரத்தை கடந்த பாதிப்பு!
விண்ணப்ப செயல்முறை:
- முதலில் tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை திறக்கவும்.
- முகப்புப் பக்கத்தில் ‘அறிவிப்புகள்’ என்பதைக் கிளிக் செய்யவும்.
- இப்போது ‘எக்ஸிகியூட்டிவ் ஆபீசர், கிரேடு- IV (குரூப்- VIII சேவைகள்) (தமிழ்நாடு இந்து மதம் மற்றும் தொண்டு நிறுவனங்களின் துணை சேவை)’ என்பதன் கீழ் ‘ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்’ என்பதைக் கிளிக் செய்யவும்.
- TNPSC போர்ட்டலில் பதிவு செய்து உள்நுழையவும்.
- கேட்கப்பட்ட அனைத்து சான்றிதழ்களையும் நிரப்பவும்.
- குறிப்பிடப்பட்ட ஆவணங்களை பதிவேற்றவும்.
- கட்டணம் செலுத்தி விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
- தேவைப்பட்டால் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளவும்.
விண்ணப்பக் கட்டணம்:
விண்ணப்பதாரர்கள் பதிவு செய்ய விண்ணப்பக் கட்டணமாக ரூ.150 மற்றும் தேர்வுக் கட்டணமாக ரூ. 100 ஆகியவற்றை செலுத்த வேண்டும்.
தேர்வு தேதி:
செயல் அலுவலர்களுக்கான TNPSC ஆட்சேர்ப்புக்கான எழுத்துத் தேர்வு செப்டம்பர் 11 அன்று காலை 9:30 முதல் மதியம் 12:30 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் இரண்டு ஷிப்டுகளாக நடைபெற இருக்கிறது.