நவ.19ம் தேதி பண்டிகையை முன்னிட்டு பொது விடுமுறை அறிவிப்பு – முதல்வரின் உத்தரவு!

0
நவ.19ம் தேதி பண்டிகையை முன்னிட்டு பொது விடுமுறை அறிவிப்பு - முதல்வரின் உத்தரவு!
நவ.19ம் தேதி பண்டிகையை முன்னிட்டு பொது விடுமுறை அறிவிப்பு - முதல்வரின் உத்தரவு!
நவ.19ம் தேதி பண்டிகையை முன்னிட்டு பொது விடுமுறை அறிவிப்பு – முதல்வரின் உத்தரவு!

நவம்பர் 19ம் தேதி அன்று வர இருக்கும் கார்த்திக் பூர்ணிமா பண்டிகையை முன்னிட்டு பக்தர்களின் நலன் கருதி அன்று மாநிலம் முழுவதும் பொது விடுமுறை அளித்து உத்தரபிரதேச முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும், பண்டிகை சமயத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொது விடுமுறை அறிவிப்பு:

நவம்பர் 19ம் தேதி அன்று வர இருக்கும் கார்த்திக் பூர்ணிமா பண்டிகை வட இந்திய மாநிலங்களில் உள்ள மக்கள் சிறப்பாக கொண்டாடப்படும் முக்கிய பண்டிகையாகும். தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர் வரும் இந்த பூஜைக்காக முன்னதாக அரசு விடுமுறை அளிக்கப்படவில்லை. பின்னர் மக்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் இது தொடர்பான ஆலோசனை கூட்டம் உத்தரபிரதேச முதல்வர் ஆதித்யநாத் தலைமையில் நடத்தப்பட்டது.

தமிழக அரசில் 4.5 லட்சம் காலிப்பணியிடங்கள் – விரைந்து நிரப்ப ஊழியர்கள் சங்கம் கோரிக்கை!

அதன் அடிப்படையில், நவம்பர் 19ம் தேதி அன்று கார்த்திக் பூர்ணிமாவை முன்னிட்டு உத்தரபிரதேச மாநிலம் முழுவதும் பொது விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் முன் பகுதியாக நவம்பர் 14ம் தேதியான நேற்று ‘பஞ்ச்கோசி’ மற்றும் ‘சௌதா கோசி பரிக்ரமா’ போன்றபூஜைகள் அயோத்தியில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மாதம் அதிக அளவிலான திருவிழாக்கள் நடக்க இருப்பதால் மக்களின் கூட்டமும் அதிக அளவில் இருக்கும். இதனால் மக்களுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை காவல்துறை அதிகாரிகள் மேற்கொள்ள முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

சபரிமலை தரிசனம் செல்பவர்களின் கவனத்திற்கு – இன்று கோவில் நடைதிறப்பு!

இந்த மாதத்தில் வெப்பநிலை குறைந்து அதிக பனி நிலவுவதால் மக்களுக்கு இரவு நேரங்களில் தங்கும் வகையில், இடங்களை அமைக்கவும், கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளவும், நடைபாதைகள், குறுக்கு சாலைகள் மற்றும் சிலைகளின் கீழ் மக்கள் தூங்காமல் இருப்பதை உறுதி செய்யவும் காவல்துறையினர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இது தொடர்பான முதல்வரின் அறிவிப்புகளை உத்தரபிரதேச அரசின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டு உள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!