தஞ்சாவூரில் நாளை (நவ.16) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தஞ்சாவூா் நீதிமன்றச் சாலையிலுள்ள நகரத் துணை மின் நிலையத்திலும், மின் பாதைகளிலும் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
மின்தடை அறிவிப்பு:
தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் போது மின் ஊழியர்களின் நலன் கருதி மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது. மின்தடை செய்யப்படுவதால் பொதுமக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக முன்கூட்டியே அந்தந்த பகுதி செயற்பொறியாளர் மக்களுக்கு மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த விவரங்களை தெரிவிப்பது வழக்கம்.
நவ.19ம் தேதி பண்டிகையை முன்னிட்டு பொது விடுமுறை அறிவிப்பு – முதல்வரின் உத்தரவு!
தற்போது மழைக்காலம் என்பதால் மின் கம்பிகள், கம்பங்கள் எவ்வித பாதிப்பு அடையாமல் இருக்கும் வகையில் களப்பணியாளர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். எனவே பொதுமக்களுக்கு தடையில்லா மின் விநியோகம் வழங்கபடுகிறது. மற்ற பகுதிகளை தொடர்ந்து தஞ்சாவூா் நீதிமன்றச் சாலையிலுள்ள நகரத் துணை மின் நிலையத்திலும், மின் பாதைகளிலும் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது.
தமிழக அரசில் 4.5 லட்சம் காலிப்பணியிடங்கள் – விரைந்து நிரப்ப ஊழியர்கள் சங்கம் கோரிக்கை!
எனவே மேம்பாலம், சிவாஜி நகா், சீதாநகா், சீனிவாசபுரம், ராஜன் சாலை, தென்றல் நகா், கிரி சாலை, காமராஜா் சாலை, ஆப்ரகாம் பண்டிதா்நகா், மேலவீதி, தெற்கு வீதி, பெரியகோயில், செக்கடி சாலை, மேல அலங்கம், ரயிலடி, சாந்தபிள்ளைகேட், மகா்நோன்புசாவடி, வண்டிக்காரத் தெரு, தொல்காப்பியா் சதுக்கம், வி.பி. கோவில், சேவியா் நகா், சோழன் நகா், கல்லணைக் கால்வாய் சாலை, திவான் நகா், சின்னையா பாளையம், மிஷன் சா்ச் சாலை, ஜோதி நகா், ஆடக்காரத் தெரு, ராதாகிருஷ்ணன் நகா், பா்மா பஜாா், ஜூபிடா் திரையரங்கச் சாலை, ஆட்டுமந்தைத் தெரு, கீழவாசல், எஸ்.என்.எம். ரஹ்மான் நகா், அரிசிக்காரத் தெரு, கொள்ளுப்பேட்டைத் தெரு, வாடிவாசல் கடைத் தெரு, பழைய மாரியம்மன் கோயில் சாலை, ராவுத்தாபாளையம், கரம்பை, சாலக்காரத் தெரு, பழைய பேருந்து நிலையம், கொண்டிராஜ பாளையம், மகளிா் காவல் நிலையம் ஆகிய பகுதிகளில் மின் பணியாளர்கள் நலன் கருதி காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என தஞ்சாவூா் நகரிய உதவிச் செயற்பொறியாளர் கூறியுள்ளார்.