UPSC புதிய வேலைவாய்ப்பு வெளியீடு – 150+ பணியிடங்கள் || விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு…!
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Drug Inspector, Assistant Keeper, Master in Chemistry, Mineral Officer, Assistant Shipping Master and Assistant Director, Vice-Principal & Senior Lecturer பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- தற்போது யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பில் கீழுள்ளவாறு 161 காலிப்பணியிடங்கள் நிரப்ப திட்டமிட்டுள்ளது.
- மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் அல்லது கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Degree / Engineering / Master Degree முடித்திருப்பது அவசியமாகும். மேலும் விரிவான தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
- மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் பணிக்கு தேவையான அளவிற்கு முன் அனுபவம் பெற்றிருப்பது அவசியமாகும்.
- பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 55 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுய்க்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
- மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படும் பணி மற்றும் பதவிக்கு தகுந்தாற்போல் 7th CPC என்கிற மத்திய அரசு ஊதிய அளவின் படி தகுதி மற்றும் அனுபவத்திற்கு ஏற்ப ஊதியம் பெறுவார்கள். மேலும் இது தொடர்பான விரிவான தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
- மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் அனுபவம் பொருத்து Shortlist செய்யப்பட்டு, அதன்பின் நேர்காணல் வாயிலாக தகுதி வாய்ந்த நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
- General / OBC / EWS மற்றும் ஆண்களுக்கு ரூ.25/- மற்றும் பெண்களுக்கு, SC / ST / PWD விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 16.06.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.