EPFO கணக்கில் வரவிருக்கும் முக்கிய மாற்றங்கள் – கூடுதல் வருமானம் தரவிருக்கும் திட்டம்!

0
EPFO கணக்கில் வரவிருக்கும் முக்கிய மாற்றங்கள் - கூடுதல் வருமானம் தரவிருக்கும் திட்டம்!
EPFO கணக்கில் வரவிருக்கும் முக்கிய மாற்றங்கள் - கூடுதல் வருமானம் தரவிருக்கும் திட்டம்!
EPFO கணக்கில் வரவிருக்கும் முக்கிய மாற்றங்கள் – கூடுதல் வருமானம் தரவிருக்கும் திட்டம்!

இந்தியாவில் சம்பளம் பெறும் நபர்களுக்கு நிறுவனம் சார்பில் பிஎப் கணக்கு தொடங்கப்படுகிறது. இந்த பிஎப் கணக்குகளை EPFO அமைப்பு நிர்வகித்து வருகிறது. அவ்வப்போது பிஎப் கணக்கு குறித்த முக்கிய அறிவிப்புகளையும் EPFO வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது EPFO புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.

EPFO கணக்கு

இந்தியாவில் பணிபுரியும் ஊழியர்களின் மாத சம்பளத்தில் இருந்து 12 சதவீதம் வரை பிடித்தம் செய்யப்படுகிறது. அவை வருங்கால வைப்பு நிதியாக அவர்களது கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதனுடன் நிறுவனங்களும் குறிப்பிட்ட தொகையை வரவு வைத்து மொத்த தொகையை அவர்கள் ஓய்வு பெறும் போது வழங்கப்படுகிறது. இந்த பிஎப் தொகையானது அவர்களின் வருங்காலத்திற்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. பிஎப் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் பணத்தை EPFO அமைப்பு பல்வேறு திட்டத்தில் முதலீடு செய்து பயனுள்ள வகையில் பணத்தை பாதுகாத்து வருகிறது. இதன் மூலம் கணக்குதாரர்களுக்கு நல்லதொரு லாபமும் கிடைக்கிறது.

சஞ்ஜீவ்வின் பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த நடிகை ஆலியா – வைரலாகும் வீடியோ!

தற்போது EPFO பங்குச் சந்தையில் முதலீடு செய்து வருகிறது. சமீப காலமாக பங்கு சந்தையில் லாபம் அதிகரித்து காணப்படுகிறது. தொழிற்சங்கங்கள் EPFO மூலம் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வது வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் EPFO அமைப்பு ஈக்விட்டுகளில் தனது முதலீடுகளை தற்போதைய வரம்பை 15 சதவீதத்தில் இருந்து 20% வரை உயர்த்துவதற்கான திட்டத்திற்கு இந்த மாதம் ஒப்புதல் அளிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து ஜூலை 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள டிரஸ்டீஸ் கூட்டத்தில் பரிசீலிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exams Daily Mobile App Download

தற்போது 20 சதவீதமாக திருத்துவதற்கான முன்மொழிவு ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் ஆலோசனைக் குழுவான நிதி தணிக்கை மற்றும் முதலீட்டுக் குழுவினரால் சரிபார்க்கப்பட்டு அங்கீகரிக்கப்பட உள்ளது. கடந்த ஆகஸ்ட் 2015 EPFO இல் எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்டுகளில் முதலீடு செய்யத் தொடங்கியது அதன் முதலீட்டு வைப்பு தொகையில் 5 % தொகையை பங்கு-இணைக்கப்பட்ட தயாரிப்புகளில் முதலீடு செய்து வந்தது. இதனால் நடப்பு நிதியாண்டில் 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!