வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 வரை உதவித்தொகை – அரசு அதிரடி உத்தரவு!
வேலையில்லாமல் திண்டாடி கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.3,000 உதவித்தொகை வழங்கப்படும் என ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 5 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு உருவாக்கி தரப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உதவித்தொகை:
குஜராத் மாநிலம் கிர் சோம்நாத் மாவட்டத்தின் வெராவல் நகரில் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த பொதுக்கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியின் (ஏஏபி) ஒருங்கிணைப்பாளர் மற்றும் டெல்லி முதல்வரான அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டு பேசினார். அப்போது குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைந்தால் வேலையில்லாத இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பல சிறப்பான சலுகைகளை தருவதாக வாக்குறுதி அளித்தார்.
Exams Daily Mobile App Download
அதாவது, தற்போது குஜராத் மாநிலத்தில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைந்தால் குஜராத்தில் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு ஐந்து ஆண்டுகளில் வேலைவாய்ப்பினை பெற்று தரும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், வேலைவாய்ப்பு கிடைக்கும் வரைக்கும் மாதம் ரூ.3000 வேலையின்மை உதவித்தொகையாக இளைஞர்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 10 லட்சம் அரசு வேலை காலியிடங்களை உருவாக்கி தருவதாகவும் டெல்லி முதல்வரான அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்துள்ளார்.
தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு – நாளை (ஆகஸ்ட் 3) வேலை நிறுத்தம்
இதனையடுத்து, குஜராத்தில் போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள் கசிந்ததாக பல குற்றசாட்டுகள் எழுந்து வருகிறது. இந்நிலையில், வினாத்தாள் கசிவதை தடுக்கவும், அதற்கான குற்றவாளிகளை கண்டுபிடித்து தகுந்த தண்டனை வாங்கி கொடுக்கப்படும் எனவும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, குஜராத் மாநிலத்தில் மாதத்திற்கு 300 யூனிட் வரைக்கும் இலவச மின்சாரம் வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, ஆம் ஆத்மி அரசாங்கம் கூட்டுறவுத் துறையில் ஆட்சேர்ப்பு செயல்முறையை வலுப்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.