சென்னை: அதிரடியாக உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
தமிழகத்தில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 200 உயர்ந்துள்ளது. கடந்த மாதம் மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி வரியை அதிகரித்ததை தொடர்ந்து தங்கத்தின் விலையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் நகைப்பிரியர்கள் கவலையில் உள்ளனர்.
தங்கம் விலை:
இந்தியாவில் கடந்த வருடம் விதிக்கப்பட்ட ஊரடங்கில் இருந்து தங்கம் விலையானது தொடர்ந்து உயர்ந்து வருகிறது. எப்போதும் தங்கம் விலையானது அமெரிக்க டாலரின் மதிப்பை பொறுத்து நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது டாலரின் மதிப்பு அதிகரித்துள்ளதால் தங்கம் விலையும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போரின் விளைவால் கச்சா எண்ணெய் மற்றும் தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. மேலும் பங்குச்சந்தையும் சரிந்து வருகிறது. இதுவும் தங்கத்தின் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி விதியை அதிகரித்தது. இந்த இறக்குமதி விதி அதிகரித்த ஒரு வாரத்தில் மட்டும் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 1000 ரூபாய் வரை அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜூலை 27, 28 ஆகிய தேதிகளில் தங்கத்தின் விலையானது சவரனுக்கு ரூ.256, ரூ. 304 என உயர்ந்து ஒரு சவரன் ரூ.37,800 க்கு விற்பனை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று காலை நேர நிலவரப்படி தங்கம் விலை உயர்ந்துள்ளது. இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.38,560–க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 வரை உதவித்தொகை – அரசு அதிரடி உத்தரவு
மேலும் ஒரு கிராம் தங்கம் ரூ.25 உயர்ந்து ரூ.4,820-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.30 காசுகள் அதிகரித்து, ரூ.63.60-க்கும், ஒரு கிலோ 63,600-க்கும் விற்பனையாகி வருகிறது. இந்த மாதத்தின் தொடக்கத்திலேயே தங்கம் விலையானது உயர்ந்து வருவது நகைப்பிரியர்கள், பெண்கள் மற்றும் திருமணத்திற்கு நகைகள் வாங்குவோர் மத்தியில் பலத்த அதிர்ச்சியையும் சிரமத்தையும் ஏற்படுத்தியுள்ளது.