எதிர்பாராத விதமாக கர்ப்பமான முல்லை – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்தினர்கள் மகிழ்ச்சி! ப்ரோமோ ரிலீஸ்!
முல்லை செயற்கை முறையில் சிகிச்சை எடுத்துக் கொள்வாரா, முல்லைக்கு குழந்தை பிறக்குமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது முல்லை கர்ப்பமாக இருப்பது போன்ற ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதாவது முல்லைக்கு குழந்தை பிறக்குமா பிறக்காதா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். முல்லையால் இயற்கையாக கருவுற முடியாது எனவும், செயற்கை முறையில் வேண்டுமானால் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என மருத்துவர் கூறியதை தொடர்ந்து குடும்பத்தினர்கள் அனைவரும் செயற்கை முறையில் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என முடிவெடுத்துள்ளனர்.
ஆனால் செயற்கை முறையில் குழந்தை பெற்றுக் கொள்ள நிறைய செலவாகும் என்பதால் மூர்த்தி வீடு கட்டும் பிளானை தற்போதைக்கு நிறுத்தி வைக்கலாம் என கூறிவிடுகிறார். ஆனாலும் அனைவருக்கும் சொந்தமான இந்த வீட்டை முல்லைக்காக மட்டும் எப்படி விட்டுக் கொடுக்க முடியும் என மீனா சண்டை போடுகிறார். இதற்கு நடுவே முல்லையிடம் ஒருவர் நீ குழந்தை வரம் வேண்டி பரிகாரம் செய்தால் குழந்தை பிறக்க வாய்ப்பிருக்கிறது எனக் கூறுகிறார்.
பாக்கியாவை போலீசில் சிக்க வைத்த கோபி, உண்மையை கண்டறிவாரா எழில்? சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
எப்படியும் குடும்பத்தினர்கள் செயற்கை முறையில் சிகிச்சை எடுக்கத் தயங்குவார்கள். இதனால் நாம் பரிகாரம் செய்தாவது குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என நினைக்கிறார். ஆனால் முல்லையின் உடல்நிலை தற்போது மோசமான நிலையில் இருப்பதால் பரிகாரம் செய்ய வேண்டாமென குடும்பத்தினர்கள் தடுக்கின்றனர். முல்லை என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் திடீரென முல்லைக்கு மயக்கம் வருகிறது. மருத்துவமனைக்கு பதட்டத்துடன் குடும்பத்தினர்கள் அழைத்துச் செல்கிறார்கள். அப்போது மருத்துவர் முல்லை கர்ப்பமாக இருப்பதை தெரியபடுத்துகிறார். குடும்பமே இந்த மகிழ்ச்சியில் தத்தளிக்கும் படியான ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.