பாக்கியாவை போலீசில் சிக்க வைத்த கோபி, உண்மையை கண்டறிவாரா எழில்? சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

0
பாக்கியாவை போலீசில் சிக்க வைத்த கோபி, உண்மையை கண்டறிவாரா எழில்? சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
பாக்கியாவை போலீசில் சிக்க வைத்த கோபி, உண்மையை கண்டறிவாரா எழில்? சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
பாக்கியாவை போலீசில் சிக்க வைத்த கோபி, உண்மையை கண்டறிவாரா எழில்? சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

விஜய் டிவி, பாக்கியலட்சுமி சீரியல் கோபி ராதிகாவை திருமணம் செய்து கொள்வாரா? என்ற பரபரப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாக்கியா போலீஸ்-ல் சிக்கி கொண்டு உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த எழில், பாக்கியாவை காப்பாற்ற போராடுகிறான். பாக்கியாவை போலீசில் சிக்க வைத்தது கோபியின் தந்திரமாக இருக்குமோ என ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இன்றைய எபிசோடு :

விஜய் டிவியில் ஹிட்டாக ஓடும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்தச் சீரியலுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது. ராதிகாவின் மகளான மயூராவின் பிறந்தநாளை முன்னிட்டு, ஆதரவற்றோர் இல்லத்தில் குழந்தைகளுக்கு உணவு கொடுத்து விட்டு ராதிகா காரில் சென்று கொண்டிருக்கும் போது மயூவை அழைத்துக் கொண்டு நாம ஒரு இடத்துக்கு போக போகிறோம் என்று சொல்கிறார். எங்கே ஹேட்டலா என கோபி கேட்க இல்லை என ராதிகா சொல்கிறார் பிறகு தியேட்டரா மாலா என கேட்க இல்லை டீச்சர் வீட்டுக்கு போகிறோம் என சொல்கிறார். எனினும் இந்த நேரத்தில் குழந்தைகள் ஆசிரமம் இல்லத்தில் இருந்து போன் செய்து சாப்பாட்டில் ஏதோ பிரச்சனை. குழந்தைகள் எல்லாரும் மயக்கம் போட்டு இருக்கிறார்கள் என சொல்ல ராதிகா பதறிப்போய் ஹோமிற்கு செல்கிறார்.

சீரியல் நடிகருடன் ‘செய்தி வாசிப்பாளர்’ கண்மணிக்கு நிச்சயதார்த்தம் – விரைவில் டும் டும்! குவியும் வாழ்த்துக்கள்!

இந்தப் பக்கம் செழியன் விஷயம் தெரிந்து டிவி வைத்து பார்க்க குடும்பம் மொத்தமும் அதிர்ச்சி அடைகின்றது. போலீசில் புகார் அளித்திருப்பதாக ஆசிரமத்தில் இருப்பவர்கள் கூற ராதிகா அதிர்ச்சி அடைகிறார். இதனை தொடர்ந்து போலீசார் வந்து விசாரணை செய்கின்றனர். நாங்கள் சாப்பாட்டை ஒரு மெஸ்ஸில் ஆர்டர் செய்து தான் வாங்கி வந்தோம் என கோபி சொல்கிறார். அந்த மெஸ்ஸின் பெயர் என்ன என போலீஸ் கேட்கின்றனர். ராதிகா, பாக்கியா தான் உணவு சமைத்தார் என்பதை போலீசாரிடம் கூற, பாக்கியாவை போலீஸ் ஸ்டேஷன்க்கு அழைத்து வந்தனர். அப்போது பாக்கியா நான் எந்த தப்பும் பண்ணல, இது எப்படி நடந்தது என எனக்கே குழப்பமாக இருக்கு என்று கூறுகிறார். ராதிகாவிடம் என் மேல எந்த தப்பும் இருக்காதுன்னு சொல்லுங்க என சொல்ல அவள் பதில் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார்.

பாரதியிடம் புது மருத்துவமனையை பார்த்துக் கொள்ள சொல்லும் விக்ரம், வெண்பாவிடம் சவால் விட்ட சௌந்தர்யா – இன்றைய எபிசோட்!

அதன் பின்னர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த எழிலிடம் பாக்கியா பயமா இருக்குடா, என்னை எப்படியாச்சும் வெளியே கூட்டிட்டு போ என்று கண் கலங்குகிறார். அம்மா நீ தைரியமா இரு என எழில் ஆறுதல் கூறுகிறார். அதன் பின்னர் வீட்டுக்கு வந்த எழில் நடந்தது என்ன என செல்வியிடம் விசாரிக்கிறான். அவள் நம்ம பக்கம் தப்பு நடக்க வாய்ப்பு இல்லை என கூறுகிறார். எழில் ஆசிரமத்தில் சென்று எங்கயோ தப்பு நடந்திருக்கு. அதை கண்டுபிடிக்க உதவி பண்ணுங்க என கேட்க அவர்கள் எழிலை திட்டி வெளியில் அனுப்பி விடுகின்றனர். பாக்கியா ராதிகாவிடம் பேச, அதற்கு ராதிகா பேசாதீங்க. உங்களால முடியாதுன்னா முடியாதுன்னு சொல்ல வேண்டியது தான. உங்களுக்கு நல்லது மட்டுமே நினைச்ச என்னை எங்க கொண்டு வந்து உட்கார வச்சுட்டீங்க பாருங்க என கூறுகிறார். இதனால் பாக்கியா அதிர்ச்சி அடைகிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!