இந்திய ரயில் பயணிகள் கவனத்திற்கு – 216 சேவைகள் ரத்து!
இந்தியாவில் முக்கிய வழித்தட ரயில்கள் சில பராமரிப்பு பணிகள் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனால் ரயில் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தற்போது ரத்து செய்யப்பட்ட ரயில்களின் விவரம் குறித்து இப்பதிவில் காண்போம்.
ரயில்கள் ரத்து:
இந்தியாவில் பரவிய கொரோனா இரண்டாம் அலை காரணமாக கடந்த ஏப்ரல், மே மாதத்தில் விதிக்கப்பட்ட ஊரடங்கால் ரயில் பயணிகளின் வருகை குறைவால் பெரும்பாலான ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. இதனால் ரயில்வேத்துறை பெரும் சரிவை சந்தித்து. இந்தியாவில் ரயில் சேவை என்பது அத்தியாவசிய சேவையில் ஒன்றாக இருப்பதால் கொரோனா சற்று குறைந்த நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ரத்து செய்யப்பட்ட ரயில்கள் மீண்டும் இயங்க தொடங்கியது. கொரோனா முழுமையாக குறையாமல் உள்ளதால் கூட்டம் கூடுவதை தவிர்க்க முன்பதிவு அடிப்படையில் மட்டுமே ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது.
தமிழகத்தில் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான நெறிமுறைகள் – CEO அறிவிப்பு!
இதனால் ரயில் பயணிகள் அவசர காரணங்களுக்கு வெளியூர்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்ததும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் மீண்டும் இயக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் பயணம் செய்ய பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதாவது கட்டாயம் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். மேலும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
இந்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ரயில்கள் இயக்கப்பட்டு வருவதன் காரணமாக தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது. இந்த நிலையில் கனமழை, ரயில் பராமரிப்பு பணிகள் போன்றவற்றின் காரணமாக நாடு முழுவதும் சுமார் 216 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதில் 179 ரயில்கள் முழுவதுமாகவும் மீதமுள்ளதை 37 ரயில்கள் பகுதி நேரமாக இயங்கியது.