தமிழகத்தில் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான நெறிமுறைகள் – CEO அறிவிப்பு!
தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து வகை பள்ளிகளும் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. அதனால் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளார்.
வழிகாட்டு நெறிமுறைகள்
தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து வகை பள்ளிகளுக்கும் வருகிற 16,17 ஆகிய இரு தினங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. அதனால் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுமாறு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மாவட்டத்தின் அனைத்து பள்ளிகளிலும் உள்ள தலைமை ஆசிரியர்கள், உதவித்தலைமை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள் / பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் / சிறப்பு ஆசிரியர்கள் பள்ளி தொடங்குவதற்கு முன்னர் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும்.
10ம் வகுப்பு முடித்தவர்க்கு தேர்வில்லாமல் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !
மேலும் இதில், பள்ளியில் எந்தவொரு அசம்பாவிதம் நடந்தாலும் உடனடியாக முதன்மைக் கல்வி அலுவலருக்கு தெரியப்படுத்த வேண்டும். பள்ளிகளில் குடிநீர் / கழிவறை ஆசிரியர் பற்றாக்குறை / மாணவர்கள் எண்ணிக்கை விவரங்களை பத்திரிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்துவதற்கு முன்பாக முதன்மை கல்வி அலுவலர்களிடம் அனுமதி பெற வேண்டும். அத்துடன் பள்ளியில் பயிலும் மாணவர்களை ஆசிரியர்கள் தன்னுடைய சுய வேலைக்காக வெளியில் அனுப்பக்கூடாது. அரசின் விலையில்லா நலத்திட்டங்களுக்கும் தனியாக பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும்.
இதனை தொடர்ந்து மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் பொதுத் தேர்வில் அதிக அளவில் மாணவர்கள் தேர்ச்சி பெற சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தலாம். இதையடுத்து எழுதப்படிக்கத் தெரியாத மாணவர்களுக்கு மொழிப் பாடத்தில் சிறப்பு பயிற்சியும் நடத்த வேண்டும். மேற்கண்ட அறிவுரைகளை அனைத்து தலைமை ஆசிரியர்களும் கடைப்பிடிக்க வேண்டும். அதன்படி பள்ளியின் தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கேட்டு கொண்டுள்ளார்.