நாளை (ஜன. 20) பள்ளிகள் முழு நேரம் செயல்படும் – முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு!!
காஞ்சிபுரத்தில் மாவட்டத்தில் கடந்த மாதங்களில் பெய்த வடகிழக்கு பருவ மழையின் போது பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வண்ணம் நாளை (ஜன. 20) சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலை நாள்:
தமிழகத்தில் கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கியது. இந்த மழையால் சென்னை உள்ளிட்ட பல கடலோர மாவட்டங்கள் மிகவும் பாதிக்கப்பட்டது. இடைவிடாது பெய்த கனமழையால் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேக்க முற்று வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியது.
இந்தியாவின் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் உட்புற வடிவமைப்பு – புகைப்படங்கள் வெளியீடு!!
இத்தகைய சூழ்நிலையில் பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அதிக கனமழை பெய்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஆட்சியர் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தனர். இந்த முறையை ஈடு செய்யும் வண்ணம் மழை குறைந்த பிறகு சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதன்படி நாளை காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பருவமழையின் காரணமாக 5 நாட்களுக்கும் மேலாக விடுமுறை அளிக்கப்பட்டதன் காரணமாக அம்மாவட்ட பள்ளிகளுக்கு நாளை ஜன.20 (சனிக்கிழமை) முழு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.