அட்வான்ஸ் கொடுத்து வீட்டை வாங்க வரும் ஜனார்த்தனன், கவலையில் இருக்கும் மூர்த்தி – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

0
அட்வான்ஸ் கொடுத்து வீட்டை வாங்க வரும் ஜனார்த்தனன், கவலையில் இருக்கும் மூர்த்தி - இன்றைய
அட்வான்ஸ் கொடுத்து வீட்டை வாங்க வரும் ஜனார்த்தனன், கவலையில் இருக்கும் மூர்த்தி - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!
அட்வான்ஸ் கொடுத்து வீட்டை வாங்க வரும் ஜனார்த்தனன், கவலையில் இருக்கும் மூர்த்தி – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் மீனாவின் அப்பா ஜனார்த்தனன் மூர்த்தியிடம் பணத்தை கொடுத்து அட்வான்ஸ் கொடுக்க இருக்கிறார். மறுபக்கம் கஸ்தூரி கதிர் வீடியோவை பார்த்துவிட்டு ஹோட்டலிற்கு சென்று அது போல செய்துகாட்ட சொல்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் மூர்த்தியை பார்க்க ஜனார்த்தனன் பணத்துடன் வருகிறார். என்ன காலையிலேயே குடும்பத்துடன் பேசிக் கொண்டிருக்கீங்க என கேட்க, வீடு கட்டுவது பற்றி பேசுவதாக சொல்கிறார். பின் மீனாவிடம் கயல் எங்கே என கேட்க அவள் தூங்குவதாக மீனா சொல்கிறார். பின் ஜனார்த்தனன் 10 லட்சம் ரூபாயை அட்வான்ஸாக கொடுக்கிறார். மூர்த்தி அதை பார்த்து சந்தோசப்படுகிறார். நீங்க வாங்க இருக்கும் இடத்திற்கு அட்வான்ஸ் கொடுக்க வேண்டும் என கேள்விப்பட்டேன் அதனால் தான் பணத்தை கொடுக்க வந்தேன் என சொல்கிறார். பின் நீங்க வாங்க போற இடத்திற்கு எப்போ வேண்டும் என்றாலும் பதிவு செய்து கொள்ளுங்கள் என சொல்கிறார்.

பின் இன்னும் கொஞ்ச நாள் வீட்டில் இருந்தே ரெஸ்ட் எடுங்க என ஜனார்த்தனன் சொல்ல, தனம் மீனாவின் அப்பாவிடம் நாங்க வீட்டை கொடுத்தாலும் புது வீட்டை கட்டி முடித்துவிட்டு தான் போவோம் என சொல்ல, உங்களுக்கு எவ்வளவு காலம் வேண்டும் என்றாலும் பொறுமையாக இருந்து வீட்டை கட்டி முடித்துவிட்டு போகலாம் என சொல்ல, மீனா அதை நினைத்து சந்தோசப்படுகிறார். பின் மூர்த்தி வீட்டை விற்பதை நினைத்து கவலைப்படுகிறார். மறுபக்கம் முல்லை கதிரிடம் சமையலுக்கு தேவையான பொருள்கள் பற்றி பேசுகிறார்.

Exams Daily Mobile App Download

அப்போது கஸ்தூரி ஹோட்டலிற்கு வருகிறார். கஸ்தூரி முல்லையிடம் வீடியோ பற்றி கேட்க, ஊரே பார்த்ததை நான் பார்க்க வேண்டாமா என கேட்கிறார். முல்லை அப்பா வியாபாரம் சரியாக ஆகாமல் இருக்கிறது. இந்த நேரத்தில் இது தேவையா என கேட்கிறார். பின் கதிர் செய்து காட்ட கஸ்தூரி அருமையாக இருப்பதாக சொல்கிறார். பின் கதிர் பிரியாணி சமைக்க கஸ்தூரி வாசனை அருமையாக இருப்பதாக நினைக்கிறார். பின் கஸ்தூரி முல்லையிடம் வாசனை அருமையாக இருக்கிறது. சீக்கிரம் சாப்பிட கொண்டு வா என சொல்கிறார். கஸ்தூரியிடம் முல்லை அப்பா முதல் போனி நீ தான் சாப்பிட்டு எப்படி இருக்கிறது என சொல் என சொல்கிறார். கஸ்தூரி சாப்பிட்டு பார்த்து அருமையாக இருப்பதாக சொல்கிறார்.

ராதிகாவை திருமணம் செய்து கொள்ள போவதாக சொன்ன கோபி, கடுப்பான ஈஸ்வரி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

மறுபக்கம் ஐஸ்வர்யா பார்லரை சுத்தம் செய்ய மீனா வந்து சாப்பிட்டுவிட்டு வேலை செய்ய சொல்கிறார். ஆனால் ஐஸ்வர்யா இப்படி எல்லாம் பேசாதீங்க என சொல்ல, மீனா நீயும் வா சாப்பிடலாம் என கூப்பிடுகிறார். அப்போது கஸ்தூரி வர ஐஸ்வர்யாவிடம் கதிர் கடைக்கு போனதாக சொல்கிறார். பின் கஸ்தூரி என்னை கலராக மாற்று என ஐஸ்வர்யாவிடம் சொல்கிறார். பின் கஸ்தூரி வீட்டை விற்பது பற்றி கேட்க மீனா என்னுடைய அப்பா வீட்டை வாங்கிவிட்டதாக சொல்கிறார். கஸ்தூரி உன் அப்பா சொத்து முழுவதும் உனக்கு தான் வர போகிறது என சொல்கிறார்.

பின் தனம் அனைவரையும் சாப்பிட கூப்பிட அண்ணாச்சியும் சாப்பிட வருகின்றார். மூர்த்தி தனத்திடம் வீடு கட்டுவது பற்றி பேசுகிறார். தனம் சாப்பிடலாம் என சொல்ல அண்ணாச்சி ஒரே அலைச்சல் என சொல்லிவிட்டு சாப்பிட அமருகிறார். மூர்த்தி சாப்பாட்டை எடுத்து வாய்யில் வைக்க செல்லும் போது ஜீவா மீனாவின் அப்பா நாளை பதிவு செய்து கொள்ளலாம் என சொன்னதை சொல்கிறார். மூர்த்தி அதை கேட்டு சாப்பிடாமல் வீட்டை பார்க்க, அண்ணாச்சி என்ன ஆச்சு என கேட்கிறார். இந்த வீட்டை என் அப்பா பார்த்து பார்த்து கட்டியதாகவும் இந்த வீட்டை கொடுக்க மனசு வரவில்லை என மூர்த்தி வருத்தப்பட்டு பேசுகிறார். இதோடு இன்றைய எபிசோடு முடிகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!