TNPSC முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு – தேர்வாணையம் அறிவிப்பு!
TNPSC குரூப் 1 தேர்விற்கான முதன்மை தேர்வு கடந்த மார்ச் 4,5,6 ஆகிய தேதிகளில் நடைபெற்ற நிலையில் நேற்று தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. மேலும், தேர்வு முடிவுகளை எவ்வாறு தெரிந்து கொள்வது என்பதற்கான முழு விளக்கங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
குரூப் 1 தேர்வு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒவ்வொரு ஆண்டும் குரூப் 1, குரூப் 2, 2A, குரூப் 4 முதலான தகுதி தேர்வினை நடத்தி தகுதியான தேர்வாளர்களை தேர்ந்தெடுத்து வருகின்றனர். அந்த வகையில் துணை ஆட்சியர், காவல் துறை துணை கண்காணிப்பாளர், வணிகவரி உதவி ஆணையர், கூட்டுறவு சங்க துணைப் பதிவாளர் உள்ளிட்ட 66 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 தேர்வு குறித்தான அறிவிப்பு கடந்த ஜனவரி 20 ஆம் தேதியில் வெளியிடப்பட்டது. இடையிடையே, கொரோனா பரவலும் அதிகரித்து வந்ததால் முதன்மை தேர்வு நடத்துவதில் சிக்கல் இருந்தது.
Exams Daily Mobile App Download
இதனை தொடர்ந்து, குரூப் 1 தேர்விற்கான முதன்மை தேர்வு கடந்த மார்ச் 4,5,6 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. மேலும், குரூப் 2, 2A தேர்வும் கடந்த மே 21 ஆம் தேதியன்று நடைபெற்றது. தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது குரூப் 2, 2A தேர்விற்கான தேர்வு முடிவுகள் ஜூலை மாதத்தில் வெளியிடப்படும் எனவும், முதன்மை எழுத்து தேர்வு செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் எனவும் அதற்கான முடிவுகள் டிசம்பர் மாதத்தில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 1 முதல் 5 வகுப்பு மாணவர்களுக்கான சிறப்பு திட்டம் – அரசு அறிவிப்பு!
இந்நிலையில் குரூப் 1 தேர்விற்கான முதன்மை தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. மேலும், குரூப் 1 தேர்வெளுதிய தேர்வாளர்கள் http://tnpsc.gov.in என்கிற இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த குரூப் 1 முதன்மை தேர்வில் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த லாவண்யா என்கிற பெண்மணி மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.