தமிழகத்தில் 1 முதல் 5 வகுப்பு மாணவர்களுக்கான சிறப்பு திட்டம் – அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் 1 முதல் 5 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சிறப்பு திட்டம் ஒன்றை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்த திட்டம் மாணவர்கள்,மற்றும் பெற்றோர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
சிறப்பு திட்டம்:
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக கொரோனா நோய் பரவல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் செயல்படாமல் இருந்தது. அனைத்து பள்ளிகளிலும் ஆன்லைன் வாயிலாக தான் வகுப்புகள் நடத்தப்பட்டன. தற்போது தமிழக அரசின் தீவிர கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் தொற்றானது படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது. அதனால் பள்ளிகள் அனைத்தும் வழக்கம் போல் செயல்பட்டு வரும் இந்த நிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு புதிய புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
Exams Daily Mobile App Download
தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்ட சபையில் பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்ததில் ஒன்றாக அரசு பள்ளி மாணவர்களுக்கான சிற்றுண்டி திட்டம் தொடங்கப்படும் என்றும் அறிவித்திருந்தார். இத்திட்டமானது ஊட்டச்சத்து குறைவான குழந்தைகள் நலனை கருத்தில் கொண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் முதல் கட்டமாக மாநகராட்சி, நகராட்சி,மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள 1 முதல் 5 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் 15 மாவட்டங்களில் உள்ள 292 கிராம பஞ்சாயத்துகளில் சோதனை முறையில் சிற்றுண்டி திட்டம் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கியூட் தேர்வு எழுதிய மாணவர்கள் கவனத்திற்கு – தேர்வு முகமை முக்கிய அறிவிப்பு!
இந்த திட்டமானது சுய உதவி குழுக்கள் மூலம் சமைத்து சிற்றுண்டி வழங்கும் பணிகள் தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி 10 முதல் 600 குழந்தைகளுக்கான உணவு தினமும் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் காலை 7.45 மணிக்குள் சமையல் வேலைகளை முடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு செயல்பட உள்ள இத்திட்டமானது ஏழை எளிய மாணவர்களுக்கு மிகவும் பலன் தரக்கூடியதாக உள்ளது என்று பெற்றோர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மேலும், இத்திட்டமானது ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.