கியூட் தேர்வு எழுதிய மாணவர்கள் கவனத்திற்கு – தேர்வு முகமை முக்கிய அறிவிப்பு!

0
கியூட் தேர்வு எழுதிய மாணவர்கள் கவனத்திற்கு - தேர்வு முகமை முக்கிய அறிவிப்பு!
கியூட் தேர்வு எழுதிய மாணவர்கள் கவனத்திற்கு - தேர்வு முகமை முக்கிய அறிவிப்பு!
கியூட் தேர்வு எழுதிய மாணவர்கள் கவனத்திற்கு – தேர்வு முகமை முக்கிய அறிவிப்பு!

கியூட் தேர்வை எழுதாமல் தவறவிட்ட மாணவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்க உள்ளதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தேர்வு எழுதாத மாணவர்கள் நல்ல முறையில் தேர்வு எழுதுமாறு தேசிய தேர்வு முகாம் முக்கியம் அறிவிப்பு ஒன்றை தெரிவித்துள்ளது.

கியூட் தேர்வு :

இந்தியாவில் ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையானது கியூட் தேர்வு என்ற நுழைவு தேர்வை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தேர்வானது மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வாகும். இத்தகைய பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் படிக்க வேண்டுமெனில் இந்த தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். மேலும் இந்த தேர்வானது அனைத்து கலை,அறிவியல் கல்லூரிகளிலும் நடத்தப்படும் சாத்தியம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இத்தகைய தேர்வின் மூலம் கல்வியின் தரத்தை மேம்படுத்த முடியும் என்கிறது ஒன்றிய அரசு.

Exams Daily Mobile App Download

கியூட் நுழைவு தேர்வு நாடு முழுவதும் இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது. இந்த தேர்வை எழுத 14.9 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்தியா மற்றும் வெளிநாடுகள் உட்பட மொத்தம் 510 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அவர்கள் விருப்பப்படும் தேர்வு மையங்கள் ஒதுக்கப்படும் என்று தேர்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி, நேற்று முதல் கட்ட தேர்வு நடந்து முடிந்த நிலையில் பல மாணவர்களுக்கு தேர்வு மையங்கள் மாற்றப்பட்ட விவரம் கடைசி நேரத்தில் வெளியாகியது. இதனால் மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு சரியான நேரத்தில் செல்ல முடியாமல் தேர்வை தவற விடும் நிலை ஏற்பட்டது.

தமிழக பள்ளிகளுக்கு முக்கிய உத்தரவு – மாணவர்கள் கவனத்திற்கு!


இது தொடர்பாக தேசிய தேர்வு முகாம் அதிகாரிகள், நேற்று தேர்வு மையங்கள் மாற்றப்பட்ட காரணத்தால் தேர்வினை தவிர விட்ட மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் நடைபெறவிருக்கும் 2 ம் கட்ட தேர்வின் போது வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். இந்தியாவிலேயே மிக அதிக எண்ணிக்கையில் மாணவ மாணவிகள் பங்கேற்கும் இரண்டாவது பெரிய நுழைவு தேர்வாக கியூட் தேர்வு இடம் பெற்றுள்ளது. மேலும் மருத்துவ இளங்கலை படிப்புக்கான நீட் தேர்வினை எழுத 18 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!