TNPSC தமிழ்நாடு இந்துசமய அறநிலைய துறை பணிக்கான முக்கிய அறிவிப்பு – உடனே பாருங்க !
தமிழ்நாடு இந்துசமய அறநிலைய சார்நிலைப்பணிக்கான செயல் அலுவலர் நிலை -I பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி பற்றிய முக்கிய அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
TNPSC முக்கிய அறிவிப்பு:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அலுவலர் நிலை -I பதவிக்கான தேர்வு நடத்தப்பட்டது. தேர்வில் கலந்து கொண்ட விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதகளின் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்விற்குத் தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண் கொண்ட பட்டியல் தேர்வாணைய இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அதன் படி, தமிழ்நாடு இந்துசமய அறநிலைய சார்நிலைப்பணிக்கான செயல் அலுவலர் நிலை -I பதவிக்கு என 25 பணியிடங்களுக்கான அறிவிப்பு முன்னதாக வெளியானது. 23.04.2022 முதல் 24.04.2022 வரை இப்பணிக்கு எழுத்து தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் 468 பேர் கலந்து கொண்டு உள்ளனர். இந்த பணியிடங்களுக்கு அடுத்த கட்டமாக சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது.
Exams Daily Mobile App Download
தேர்வில் கலந்து கொண்ட 468 பேரில் 50 பேர் தேர்ச்சி அடைந்து உள்ளனர். அதற்கான முடிவுகள் சென்ற வாரம் வெளியானது. அதில் தேர்ச்சி பெற்றவருக்கு அடுத்த கட்டமாக சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முக தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வுகள் வரும் 18.08.2022 அன்று நடைபெற உள்ளது. எனவே தேர்ச்சி பெற்றவர்கள் இதில் கலந்து கொண்டு , பயனடைய வாழ்த்துகிறோம்.