TNPSC Group 2 தேர்வுக்கான முன்னேற்பாடுகள் பணிகள் தீவிரம் – மையங்களில் CCTV கேமரா பொருத்தம்!

0
TNPSC Group 2 தேர்வுக்கான முன்னேற்பாடுகள் பணிகள் தீவிரம் - மையங்களில் CCTV கேமரா பொருத்தம்!
TNPSC Group 2 தேர்வுக்கான முன்னேற்பாடுகள் பணிகள் தீவிரம் - மையங்களில் CCTV கேமரா பொருத்தம்!
TNPSC Group 2 தேர்வுக்கான முன்னேற்பாடுகள் பணிகள் தீவிரம் – மையங்களில் CCTV கேமரா பொருத்தம்!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக குரூப் 2, 2ஏ பணியிடத்திற்கான தேர்வு வருகிற மே 21ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் அதற்கான நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதையடுத்து தற்போது தேர்வு மையத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குரூப் 2, 2ஏ தேர்வு:

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக அனைத்து போட்டித்தேர்வுகளும் நடத்தப்படவில்லை. தற்போது கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை TNPSC தேர்வாணையம் வெளியிட்டது. இதில் குறிப்பிட்ட படி தேர்வுக்கான அறிவிப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகின. அதன்படி தற்போது குரூப் 2, 2ஏ பணியிடத்திற்கான தேர்வு வருகிற மே 21ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இத்தேர்வு மூலமாக சுமார் 5000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களின் கவனத்திற்கு – பள்ளிகள் திறப்பில் மாற்றம்!

இந்த தேர்வுக்கான தேர்வுக்கூட அனுமதி சீட்டை TNPSC தேர்வாணையம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதனை விண்ணப்பதாரர்கள் https://www.tnpsc.gov.in/ என்ற  TNPSCயின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். சேலம் மாவட்டத்தில் 63,437 பேர் தேர்வு எழுத இருக்கின்றனர். இந்த மாவட்டத்தில் 218 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இதில் தேர்வர்கள் செல்வதற்கு சிறப்பு பேருந்துகள் இயக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இதனை தொடர்ந்து அனைத்து தேர்வு மையங்களிலும் முறைகேடுகள் ஏற்படுவதை தடுக்க தேர்வு நடைபெறுவதை வீடியோ பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சேலம் மாவட்டத்தில் உள்ள தேர்வு கூடங்களில் 9 தேர்வு கூடங்கள் கூர்நோக்கு தேர்வு கூடங்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு மையத்தில் கண்காணிப்பை தீவிரப்படுத்த கேமரா பொருத்தமாறு மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார். இவரின் உத்தரவுப்படி தற்போது இந்த 9 தேர்வுக்கூட மையத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!