தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களின் கவனத்திற்கு – பள்ளிகள் திறப்பில் மாற்றம்!
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய கல்வியாண்டு முன்னதாக ஜூன் 13ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பள்ளிக் கல்வித்துறை பள்ளிகள் திறப்பதில் மாற்றத்தை அறிவித்துள்ளது.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் வழக்கமாக கல்வி ஆண்டு ஏப்ரல் மாத இறுதியோடு முடிந்து விடும். ஆனால் நடப்பு கல்வி ஆண்டில் பள்ளிகள் அனைத்தும் கொரோனா பரவல் அச்சம் காரணமாக மிகவும் தாமதமாக தான் தொடங்கப்பட்டது. இதனால் மாணவர்களுக்கான இறுதி தேர்வுகள் நடத்துவதில் தாமதம் ஏற்பட்டது. 10ம் வகுப்புக்கு மே மாதம் 6ம் தேதி தொடங்கி 30ம் தேதி வரையிலும், 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் 9ம் தேதி ஆரம்பித்து 31ம் தேதி வரையும், 12ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு மே மாதம் 5ம் தேதி தொடங்கி 28ம்தேதி வரையிலும் நடக்கிறது.
TNPSC குரூப் 2, 2A தேர்வு எழுத விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – மைனஸ் மார்க் விவரம் வெளியீடு!
மற்றபடி 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதி தேர்வுகள் மே 5ம் தேதி தொடங்கி மே 13ம் தேதி வரையிலும் தேர்வுகள் நடைபெற்றது. இந்த மாணவர்களுகு மே 13ம் தேதி தான் இறுதி வேலை நாளாகவும் அறிவிக்கப்பட்டது. மேலும் 1 முதல் 9ம் வகுப்பு வரையிலும் மே 14ம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்கியுள்ளது. 10, 11,12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்த பின்னர் அவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்க உள்ளது. இதற்காக பள்ளிக் கல்வித்துறை முன்னதாகவே திட்டமிட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும் 2022-2023ம் கல்வி ஆண்டு முன்னதாக கோடை விடுமுறைக்கு பின்னர் ஜூன் 13ம் தேதி முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மொத்தம் 30 நாட்கள் கோடை விடுமுறை என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது தமிழக பள்ளிக் கல்வித்துறை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, 1 முதல் 12ம் வகுப்பு வரை 2022-23ம் கல்வியாண்டிற்கான வகுப்புகள் துவங்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. அரசின் தற்போதைய அறிவிப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.