இந்த மாத இறுதியில் TNPSC குரூப் 2 &2A முடிவுகள்? வெளியான தகவல் இதோ!
தமிழகத்தில் கடந்த மே மாதம் நடைபெற்ற TNPSC குரூப் 2, 2A ன் முதல் நிலைத்தேர்வின் முடிவுகள் எப்போது வெளியாகும் என்று தேர்வர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் கட் ஆப் மதிப்பெண்கள் குறித்த தகவல்கள் வந்துள்ளது.
TNPSC குரூப் 2, 2A
தமிழகத்தில் வணிகவரி அதிகாரி, நகராட்சி ஆணையர், உதவிப் பிரிவு அலுவலர், வேளாண்மை துறை, துறை கணக்காளர், இளநிலை தொழில்நுட்ப உதவியாளர், தொழில்துறை ஆணையர் மற்றும், வணிகம், மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவை ஆகிய பணிகளுக்கான குரூப் 2,2A தேர்வு 2 வருடங்களுக்கு பிறகு 2022 மே 21ம் தேதி நடத்தப்பட்டது. இதில் 5529 காலிப்பணியிடங்களுக்கு சுமார் 9.94 லட்சம் பேர் தேர்வு எழுதினர். மேலும் விண்ணப்பித்ததில் 1.83 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் தேர்வு எழுதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கத்தை விட இந்த ஆண்டு குரூப் 2 தேர்வு வினாக்கள் மிக எளிமையாக இருந்தது என்று தேர்வர்கள் கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில் தேர்வு முடிவடைந்து 2 மாதங்கள் ஆன நிலையில் இதுவரை தேர்வின் முடிவுகள் வெளியாகவில்லை.
Exams Daily Mobile App Download
எப்போது தேர்வின் முடிவுகள் வெளியாகும் என்று தேர்வர்கள் எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர். ஏனெனில் தேர்வின் முடிவுகள் வெளியானால் தான் அடுத்த கட்ட முதன்மை தேர்வுக்கு தயாராக முடியும். இந்த தேர்வானது செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் கட் ஆப் மதிப்பெண் குறித்த கருத்து கணிப்பும் வெளியாகி வருகிறது. இந்த ஆண்டு ஒவ்வொரு பதவிக்கும் 10 மடங்கு விண்ணப்பதாரர்கள் முதன்மை தேர்வுக்கு தேர்வு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதனால் கடும் போட்டி நிலவும் என்று கூறப்படுகிறது. தற்போதைய கணிப்பின் படி குரூப் 2 வில் பொதுப்பிரிவினர்களில் பெண்களுக்கு 158 மதிப்பெண்களும் ஆண்களுக்கு 161 மதிப்பெண்கள் என கணிக்கப்பட்டுள்ளது.
தமிழக காவல்துறையில் உள்ள ஆடர்லி முறை ரத்து? உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
அதே போல SC/ST பிரிவில் பெண்களுக்கு 140 மதிப்பெண்களும், ஆண்களுக்கு 150 மதிப்பெண்கள் என கூறப்படுகிறது. மேலும் குரூப் 2 தேர்வின் முதன்மை தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெறும் எனவும் இதற்கான கலந்தாய்வு மற்றும் நேர்முகத் தேர்வு டிசம்பர் 2022 முதல் ஜனவரி 2023 க்குள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதன்மைத் தேர்வு, தனிநபர் நேர்காணல் ஆகியவை நடைபெறும் அத்துடன் விண்ணப்பதாரர்கள் சமர்ப்பித்த ஆவணம் உண்மையானதா இல்லையா என்பதை சரிபார்க்கும் பணிகளும் நடைபெறும்.