சமயப் பொதுமை
இங்கு கொடுக்கப்பட்டுள்ள சமயப் பொதுமை முக்கியமான பொது தமிழ் குறிப்புகளாகும். இது TNPSC போட்டி தேர்வுக்கு மிகவும் பயன்படும். போட்டி தேர்வாளர்கள் கீழ்கண்ட தொகுதிகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.
- தாயுமானவர்
- இவர் பிறந்த ஊர் திருமறைக்காடு
- பெற்றோர் கேடிலியப்பர் பிள்ளை – கெசவல்லி அம்மையார்
- இவர் திருச்சிவ விஜயரங்க சொக்கநாத நாயக்கரிடம் கணக்கராக (கருவூல அலுவலராகப்) பணிபுரிந்தார்.
- இவர் மனைவி மட்டுவார் குழலி
- இவரது மகன் கனக சபாபதி
- இவரது மனைவி இறந்தவுடன், தனது மகனை தனது தமையனார் சிவசிதம்பரமிடம் வளர்க்கும் படி பொறுப்பை ஒப்படைத்தார்.
- திருச்சி மௌன குருவிடம் உபதேசம் பெற்றார்.
- தனது குரு திருமூலர் மரபில் வந்தவராக கூறுகின்றனர்.
- அதை ஒட்டியே தம் பாடல்களில் “மூலன் மரபில் வரு மௌன குருவே” என்று போற்றி இருப்பது தெரிய வருகிறது.
- தாயுமானவர் தமிழ், வடமொழி, கணிதம், ஜோதிடம் போன்றவற்றில் நிபுணராக விளங்கினார்.
- இவரது காலம் 1706 – 1744
- இவர் பாடல்களுக்கு “தாயுமானவ சுவாமிகள் திருப்பாடல் திரட்டு” என்று பெயர்.
- இதில் 5 உட்பிரிவு, 1452 பாடல்கள் உள்ளன.
- இவர் பாடிய நாட்டுப் பாடல் வடிவம் கண்ணி அவைகள் பராபரக் கண்ணி, எந்நாட்கண்ணி, கிளிக்கண்ணி, ஆனந்தக் களிப்பு, ஆகார புவனம் போன்றவை இவர் பாடல் தலைப்புகள் சிலவாகும்.
- இவைகள் பராபரக் கண்ணி, எந்நாட்கண்ணி, கிளிக் கண்ணி புகழ் போன்றவை.
- இவர் சைவ சித்தாந்தம், அத்வைதம் இரண்டிற்கும் சமரசம் செய்ய முயன்றார்.
- இவரது எளிய பாடல்கள் உள்ள இயல்பை உணர்ந்த இஸ்லாமியர் ஆன குணங்குடி மஸ்தான் சாகிபு தனது பாடல்களில் இதனைப் பின்பற்றினார்.
மேற்கோள்
- “எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே”
- “நெஞ்சகமே கோயில் நினைவே சுகந்தம் அன்பே மஞ்சன நீர் பூசைகொள்ள வாராய்ப் பராபரமே”
- “ஆசைக்கோர் அளவில்லை அகிலமெல்லாம் கட்டி ஆளினும்”
- “சும்மா இருப்பதே சுகம்”
- “பார்க்கின்ற மலரூடு நீயே இருத்தி அப்பனிமலர் எடுக்க மனம் நண்ணேன்”
- “அன்பைப் பெருக்கி எனது ஆயுயிரைக் காக்க வந்த இன்பப் பெருக்கே இறையே பராபரமே”
2.இராமலிங்க அடிகள்:
- இவர் பிறந்த ஊர் சிதம்பரத்திற்கு அருகில் உள்ள “மருதூர்”
- இவரது பெற்றோர் இராமையாப் பிள்ளை – சின்னம்மாள்.
- இவரது காலம்10.1823 முதல் 30.01.1874 வரை ஆகும்.
- இவர் பாடிய ஆறாயிரம் பாடல்களின் திரட்டு “திருவருட்பா” என்று அழைக்கப்படுகிறது.
- இது ஆறு திருமுறைகளாக பகுக்;கப்பட்டு உள்ளது.
- திருவருட்பா திரு + அருட்பா என்று பிரிக்கலாம். இதற்கு தெய்வீக அருளால் பாடப் பெற்ற பாக்கள்” என்பது பொருள்.
- திருவருட்பா முதலில் இராமலிங்க அடிகளின் தலைமை சீடர் தொழுவூர் வேலாயுதனாரால் நான்கு திருமுறையாக வெளியிடப்பட்டது.
- பின்னர் ஐந்தாம், ஆறாம் திருமுறைகள் வெளிப்பட்டன.
- முன்னாள் தமிழக அறநிலையத் துறை ஆணையாளர் பாலகிருஷ்ணன் இராமலிங்கரின் உரைநடை, கடிதங்கள் முதலியனவற்றை தனிநூலாகத் தொகுத்து வெளியிட்டார்.
- பின்னர் ஊரன் அடிகளும் காலமுறை பதிப்பு வெளியிட்டுள்ளார்.
- இராமலிங்கரின் உடன்பிறந்தவர்கள் சபாபதி, பரசுராமன், உண்ணாமுலை, சுந்தராம்பாள் ஆவார்.
- இராமலிங்கர் பெற்றோருக்கு ஐந்தாவது மகன் ஆவர்.
- இராமலிங்கர் தனது உடன்பிறந்த உண்ணாமுலை மகள் தனக்கோடியை தனது இருபத்தேழாவது வயதில் திருமணம் செய்து கொண்டார்.
இராமலிங்க அடிகள் கொள்கை
- கடவுள் ஒருவரே அவர் அருட்பெருஞ்சோதி ஆண்டவர்.
- புலால் உணவு உண்ணக் கூடாது.
- எந்த உயிரையும் கொல்லக்கூடாது.
- சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கூடாது.
- இறந்தவர்களை எரிக்க கூடாது, சமாதி வைத்தல் வேண்டும்.
- எதிலும் பொது நோக்கம் வேண்டும்.
- பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும்.
- சிறு தெய்வ வழிபாடு கூடாது. அவற்றின் பெயரால் பலி இடுதலும் கூடாது.
- எல்லா உயிர்களும் நமக்கு உறவுகளே அவற்றை துன்புறுத்தக் கூடாது.
வளரும் பிள்ளைகளுக்கு வள்ளலார் வழங்கிய அறிவுரைகள்
- நல்லோர் மனதை நடுங்க செய்யாதே
- தானம் கொடுப்போரைத் தடுத்து நிறுத்தாதே
- மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்யாதே
- ஏழைகள் வயிறு எரியச் செய்யாதே
- பொருளை இச்சித்து பொய் சொல்லாதே
- பசித்தோர் முகத்தைப் பாராதிராதே
- இரப்போர்க்கு பிச்சை இல்லை என்னாதே
- குருவை வணங்க கூசி நிற்காதே
- வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே
- தந்தை, தாய் மொழியை தள்ளி நடக்காதே.
வள்ளலார் பதிப்பித்தவை
- சின்மய தீபிகை
- ஒழி விலொடுக்கம்
- தொண்டமண்டல சதகம்
இயற்றிய உரைநடை
- மனுமுறை கண்ட வாசகம்
- ஜீவ காருண்யா ஒழுக்கம்
வள்ளலாரின் பன்முக ஆற்றல்கள்
- சிறந்த சொற்பொழிவாளர்
- போதகாசிரியர்
- உரையாசிரியர்
- சித்த மருத்துவர்
- பசிப்பிணி போக்கிய அருளாளர்
- பதிப்பாசிரியர்
- நூலாசிரியர்
- இதழாசிரியர்
- இறையன்பர்
- ஞானாசிரியர்
- அருளாசிரியர்
- சமூக சீர்திருத்தவாதி
- தீர்க்கதரிசி
- மொழி ஆய்வாளர் (தமிழ்)
- இவர் “சமரச வேத சன்மார்க்க சங்கம்” என்ற அமைப்பை உருவாக்கினார்.
- பிற்காலத்தில் அந்த பெயரை “சமரச சுத்த சன்மார்க்க சத்தியத் சங்கம்” என்று மாற்றியமைத்தார்.
- இவரது பாடல்கள் இடம் பெற்றுள்ள யாப்பு வடிவங்கள்: கண்ணி, கும்மி, கீர்த்தனை.
- நிறுவிய நிறுவனங்கள்: சன்மார்க்க சங்கம், சத்திய தருமசாலை, சத்திய ஞானசபை, சித்தி வளாகம்.
- இவர் தமது கொள்கைக்கெனத் தனிக்கொடி கண்டவர் அது மஞ்சள், வெள்ளை நிறம் கொண்டது.
- இராமலிங்கம் “வடிவுடை மாணிக்க மாலை” என்னும் நூலையும் திருவொற்றியூர் சிவபெருமான் மீது “எழுத்தறியும் பொரும் மாலை” என்னும் நூலையும் பாடியுள்ளார்.
- “உயிரிரக்கமே பேரின்ப வீட்டின் திறவுக்கோல்” என்றார் வள்ளலார்.
- பாரதியார் வள்ளலாரைப் “புது நெறி கண்ட புலவர்” என்று போற்றினார்.
- வள்ளலாரின் ஞானகுரு சம்பந்தர் ஆவார்.
- வள்ளலார் இளமையில் வழிபட்ட கடவுள் முருகன்.
- வள்ளலார் முதலில் முருக பக்தர், இடையில் சிவ பக்தர், நடுவில் ஆடலரசு அன்பர், முடிவில் அருட்பெருஞ்சோதி அடியார்.
- “அருட்பெருஞ்சோதி”, “தனிப்பெருங்கருணை” வள்ளலாரின் தாரக மந்திரம் ஆகும்.
- வள்ளலாரின் கோட்பாடு: ஆன்ம நேய ஓருமைப்பாடு.
- வள்ளலாரின் கொள்கை: ஜீவ காருண்யம்
- பன்னிரு திருமுறைகளே அருட்பாக்கள். வள்ளலாரின் பாடல்களைத் திருமுறைகள் என்றழைக்கக்கூடாது.
- அவை அருட்பாக்கள் அல்ல, மருட்பாக்கள் என்று இலங்கை ஆறுமுக நாவலர் கூறினார்.
- மருட்பா பொருள் மயக்கத்தை தரும் பாடல்
- இராமலிங்க அடிகள் தமிழ் இலக்கியத்துள் மிகப்பெரிய ஆசிரியர் விருத்தம் பாடினார். 192 சீர் ஆசிரிய விருத்தம்.
- தமிழ் இலக்கியத்துள்ளே அடி எண்ணிக்கையில் பெரிய ஆசிரியப்பா பாடியவர் 1596 அடிகள் கொண்ட ஆசிரியம்.
- தொல்காப்பியர் ஆசிரியப்பாவின் பேரெல்லை 1000 அடி என்கிறார்.
மேற்க்கோள்
- “அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை”
- “அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும்
- “மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங்காற்றே”
- “ஒத்தாரும் தாழ்ந்தாரும் உளராகி உலகியல் நடத்தல் வேண்டும்”
- “அம்பலப் பாட்டே அருட்பாட்டு அல்லாதார்
- பாட்டெல்லாம் மருட்பாட்டு”
- “உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்”
- “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்
- “கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே”
- “வான் கலந்த மாணிக்க வாசக நின் வாசகத்தை”
- “கலையுரைத்த கற்பனையே நிலையெனக் கொண்டாடும்”
- “கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப் போக”
3. திரு.வி.கல்யாண சுந்தரனார்
- திருவாரூர் விருத்தாசலனார் மகன் கல்யாண சுந்தரனார் என்பதன் சுருக்கமே – திரு.வி.க
- இவரது பெற்றோர் விருத்தாசலனார் – சின்னம்மையார்
- திரு.வி.க செங்கல்பட்டு மாவட்டம் துள்ளம் என்னும் ஊரில் பிறந்தார்.
- இவரது காலம்08.1883 முதல் 17.09.1953 வரை
- இவர் பெற்ற பட்டம் தமிழ்த் தென்றல்
- இவர் “தொழிலாளர் நலனுக்கும்”, “பெண்கள் முன்னேற்றத்திற்கும்” அயராது பாடுபட்டார்.
- “தமிழ் மேடைப் பேச்சின் தந்தை” என அழைக்கப்படும் திரு.வி.க மேடைத்தமிழுக்கு இலக்கணம் வகுத்தார்.
- திரு என்பது திருவாரூரைக் குறிக்கும் சிறப்புடையதாகிறது.
- 1909ல் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள வெஸ்லியன் பள்ளியில் ஆசியராகச் சேர்ந்து ஆறு ஆண்டுகள் பணிப்புரிந்தார். அவருக்கு திருமணம் நடந்தது.
- அவருக்கு இரண்டு பிள்ளைகளும் பிறந்தனர்
- 1918 ம் ஆண்டிற்குள் தம் மனைவி, மகள், பிள்ளைகளை இழந்து மீண்டும் தனியாக வாழ்ந்தார்.
- இவரது ஆசிரியர் கதிர் வேற்பிள்ளை.
- நடத்திய இதழ் நவசக்தி
- ஆசிரியராக இருந்த இதழ் தேசபக்தன்
- திரு.வி.க நடை என்று சிறப்பிக்கும் அளவிற்கும் சிறந்த எழுத்து நடை கொண்டவர்.
- திரு.வி.க நூற்றாண்டு விழாவினை தழிழ்நாடு அரசு 1984ம் ஆண்டு தஞ்சையில் கொண்டாடியது.
- கல்கியும், வரதராசனாரும் திரு.வி.கவின் மாணவர்கள்.
எழுதிய நூல்கள்
- யாழ்பாணம் தந்த சிவஞான தீபம்
- கதிரை வேற் பிள்ளை – 1908
- மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் – 1921
- பெண்ணின் பெருமை (அ) வாழ்க்கைத் துணை – 1927
- நாயன்மார் வரலாறு – 1937
- முடியா? காதலா? சீர்திருத்தமா – 1938
- வள்ளொளிலி – 1942
- திரு.வி.க வாழ்க்கைக் குறிப்புகள் 1 – 1944
- திரு.வி.க வாழ்க்கைக் குறிப்புகள் 2 – 1944
- உரைநூல்கள்
- பெரிய புராணம் குறிப்புரையும் வசனமும் – 1907
- பட்டினத்துப் பிள்ளையார் திருப்பாடற்றிரட்டும் பத்திரகிரியார் புலம்பலும் விருத்தியுரை – 1923
- காரைக்கால் அம்மையார் திருமுறை – குறிப்புரை – 1947
- திருக்குறள் – விரிவுரை (பாயிரம்) – 1939
- திருக்குறள் – விரிவுரை (இல்லறவியல்) – 1941
அரசியல் நூல்கள்
- தேச பக்தாமிர்தம் – 1919
- என் கடன் பணி செய்து கிடப்பதே – 1921
- தமிழ்நாட்டுச் செல்வம் – 1924
- தமிழ்த் தென்றல் (அ) தலைமைப் பொழிவு – 1928
- சீர்திருத்தம்
- தமிழ்ச் சோலை கட்டுரைத் திரட்டு 1 – 1935
- தமிழ்ச் சோலை கட்டுரைத் திரட்டு 2 – 1935
- இந்தியாவும் விடுதலையும் – 1940
- தமிழ்க்கலை – 1953
- சமய நூல்கள்
- சைவ சமய சாரம் – 1921
- நாயன் மார் திறம் – 1922
- தமிழ்நாடும் நம்மாழ்வாரும் – 1923
- சைவத்தின் சமரசம் – 1925
- முருகன் (அ) அழகு – 1925
- கடவுட் காட்சியும் தாயுமானவர் – 1929
- தமிழ்நூல்களில் பௌத்தம் – 1929
- சைவத் திறவு – 1929
- நினைப்பவர் மனம் – 1930
- இமய மலை (அ) தியானம் – 1931
- சமரச சன்மார்க்க போதமும் திறவும் – 1933
- சமரச தீபம் – 1934
- சித்த மார்க்கம் – 1935
- ஆலமும் அமுதமும் – 1944
- பரம் பொருள் (அ) வாழ்க்கை வழி – 1949
பாடல்கள்:
- முருகன் அருள் வேட்டல் – 1932
- திருமால் அருள் வேட்டல் – 1938
- பொதுமை வேட்டல் – 1942
- கிறிஸ்துவின் அருள் வேட்டல் – 1945
- புதுமை வேட்டல் – 1945
- சிவனருள் வேட்டல் – 1947
- கிறிஸ்து மொழிக்குறள் – 1948
- இருளில் ஒளி – 1950
- இருமையும் ஒருமையும் – 1950
- அருகன் அருகே (அ) விடுதலை வழி – 1951
- பொருளும் அருளும் (அ) மார்க்ஸியமும் காந்தியும் – 1951
- சித்தந்திருத்தம் (அ) செத்துப்பிறத்தல் – 1951
- முதுமை ஊறல் – 1951
- வளர்ச்சியும் வாழ்வும் (அ) படுக்கை பிதற்றல் – 1953
- இன்ப வாழ்வு – 1925
PDF Download
Download TNPSC பொது தமிழ் பாடக்குறிப்புகள்
Download TNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள்
TNPSC Group 2 பாடக்குறிப்புகள் PDF Download
TNPSC Group 2 நடப்பு நிகழ்வுகள் PDF Download
WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Facebook Examsdaily Tamil – FB ல் சேர – கிளிக் செய்யவும
Telegram Channel கிளிக் செய்யவும்