TNPSC AAO தேர்வுகள் ஒத்திவைப்பு – எம்.பி கோரிக்கை!!
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. அதனால் நாளை முதல் நடைபெற உள்ள டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என எம்.பி ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் ரத்து:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் தீவிரமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 7,987 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளன. அதனை அனைத்து பொதுமக்களும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் உதவி வேளாண்மை அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலர், தோட்டக்கலை உதவி இயக்குனர் போன்ற பதவிகளுக்கான தேர்வுகள் நாளை முதல் ஏப்ரல் 17, 18 மற்றும் 19 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த தேர்வுகள் தமிழகம் முழுவதும் திட்டமிட்டபடி 7 மாவட்டங்களில் நடைபெறும் என தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்திவைப்பு – அரசு வட்டாரங்கள் தகவல்!!
மேலும் தேர்வுக்கு தேவையான கட்டுப்பாடுகள் குறித்தும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து எம்.பி.ரவிக்குமார் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக நாளை நடைபெற உள்ள டிஎன்பிஎஸ்இ தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும்”, இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.