TNPSC 626 காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – தேர்வாணையம் அதிகாரப்பூர்வ வெளியீடு!
டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் காலியாக உள்ள 626 காலிப்பணியிடங்களை நிரப்பவுள்ளனர். விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் மே 3 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம்:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு துறைகளுக்கான பணியிடங்களை நிரப்ப பல்வேறு தகுதி தேர்வுகளை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பாகவே குரூப் 2, குரூப் 2ஏ, குரூப் 4 தேர்விற்கான அறிவிப்பு வெளியாகியது. டிஎன்பிஎஸ்சி தமிழக அரசின் மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் தற்போது வெளியிட்டுள்ளது.
மத்திய அரசின் PM KISAN உதவித்தொகை பெறும் விவசாயிகள் கவனத்திற்கு – eKYC செயல்முறை விபரங்கள்!
அதாவது தமிழக அரசின் மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் மொத்தமாக 549 காலிப் பணியிடங்கள் உள்ளன. ஆட்டோ மொபைல் இன்ஜினியர் பணிக்கு 4 காலியிடமும், மின்துறையில் ஜூனியர் எலெக்ட்ரிக்கல் இன்ஸ்பெக்ட்டர் பணிக்கு 8 காலியிடமும், வேளாண்மை துறை உதவி இன்ஜினியர் பணிக்கு 66 காலியிடமும், நெடுஞ்சாலை துறை உதவி இன்ஜினியர் பணிக்கு 33 காலியிடமும், தொழில் துறை பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் உதவி இயக்குனர் பணிக்கு 18 காலியிடமும், பொதுப்பணித்துறையில் உதவி இன்ஜினியர் பணிக்கு 309 காலியிடமும், தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு மையத்தில் போர்மேன் பணிக்கு 7 காலியிடமும் உள்ளது.
மேலும், டெக்கினிக்கல் அசிஸ்டெண்ட் பணிக்கு 11 காலியிடமும், தமிழ்நாடு பஞ்சாயத்து மேம்பாட்டு சேவை துறையில் உதவி இன்ஜினியர் பணிக்கு 92 காலியிடமும் என மொத்தமாக 549 காலிப் பணியிடங்களை நிரப்பவுள்ளனர். இதுமட்டுமல்லாமல் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் உதவி இன்ஜினியர் பணிக்கு 64 காலியிடமும், மெட்ராஸ் மெட்ரோபாலிட்டன் வளர்ச்சி ஆணையத்தில் உதவி இன்ஜினியர் பணிக்கு 13 காலியிடமும் என மொத்தமாக 77 காலியிடம் உள்ளது. விண்ணப்பிக்க நினைக்கும் விண்ணப்பதாரர்கள் மே 3 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஜூன் 26ம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளது.