தமிழக அரசு கணினி சான்றிதழ் தேர்வு 2021 – டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் கவனத்திற்கு .!
தமிழக தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் சார்பில் ஆண்டு தோறும் கணினி சான்றிதழ் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா நோய் தொற்று காரணமாக, இந்த தேர்வு நடத்தப்படவில்லை. எனவே, இந்த ஆண்டு தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் ஏப்ரல் 12-ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு கணினி சான்றிதழ் தேர்வுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள்:
இந்த அரசு தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிக்க வேண்டும். மேலும் தட்டச்சில் இளநிலை முடித்திருக்க வேண்டும். தேர்வுக்கு கட்டணமாக ரூ.530 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் கவனத்திற்கு:
- சென்ற ஆண்டு இறுதியில் இருந்து அரசு பணிகளுக்கு சேர விரும்புவோர் ஆபீஸ் ஆட்டோமேசன் எனப்படும் கணினி சான்றிதழ் படிப்பு கட்டாயமாக்கப்படுள்ளது.
- டிஎன்பிஎஸ்சி நடத்தும் சுற்றுலா அலுவலர் மற்றும் உதவி சுற்றுலா அலுவலர் பணிகளுக்கு கணினி சான்றிதழ் தேர்ச்சி கட்டாயம் ஆகும்.
- டிஎன்பிஎஸ்சி குரூப்-4 போன்ற தேர்வுக்கு கணினி சான்றிதழ் தகுதி தேர்ச்சி பெறாதவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றாலும், அவர்கள் தேர்ச்சி பெறும் வகையில், பணி நிரந்தரம் என்பது அரசு கணினி சான்றிதழ் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
விண்ணப்பிக்கும் முறை:
www.tndte.gov.in என்ற இணைய முகவரி மூலம் அரசு கணினி சான்றிதழ் தேர்வுக்கு தேர்வர்கள் ஏப்ரல் 12-ம் தேதி முதல் 26-ம் தேதி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.