தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை – அகவிலைப்படி சம்பளம் || 8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் !
Assistant, Record Clerk & Security பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இந்த தமிழக அரசு பணிக்கு என மொத்தம் 73 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே தகுதியானவர்கள் இந்த அரிய வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக வேலைவாய்ப்பு விவரங்கள்:
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (TNCSC) தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் திண்டுக்கல் மாவட்டத்தில் Security பணிக்கு 23 பணியிடமும், Assistant பணிக்கு 26 பணியிடமும், Record Clerk பணிக்கு 24 பணியிடமும் என மொத்தமாக 73 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. Security பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 08 ம் வகுப்பு கட்டாயம் முடித்திருக்க வேண்டும். Security பணிக்கு ரூ.8,717/- ஊதியம் (அகவிலைப்படி ) கொடுக்கப்பட உள்ளது.
Exams Daily Mobile App Download
Assistant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 12 ம் வகுப்பு கட்டாயம் முடித்திருக்க வேண்டும். பருவகால உதவுபவர் பதவிக்கு என ரூ.8,717/- ஊதியம் (அகவிலைப்படி ) கொடுக்கப்பட உள்ளது. Record Clerk பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் / பல்கலைக்கழகங்கள் / கல்வி நிலையங்களில் Agriculture and Engineering பாடப்பிரிவில் B.Sc டிகிரி கட்டாயம் முடித்திருக்க வேண்டும். இப்பணிக்கு ரூ.8,784/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.
01.07.2022 தேதியின் படி, விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்ச வயது வரம்பு 18 என்றும், அதிகபட்ச வயது வரம்பு 32 என்றும் நிர்ணயித்துள்ளது. எனவே இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 18 முதல் 32 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. இப்பணிகளுக்கு என்று விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களில் தகுதி மற்றும் திறமை வாய்ந்த பணியாளர்கள் நேரடியாக நேர்முகத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது.
அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now
விண்ணப்பிக்கும் முறை:
பருவ கால எழுத்தர், உதவுபவர் மற்றும் காவலர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள், உரிய சான்றுகளுடன் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு 17.07.2022 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.