தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் – இன்றைய வானிலை தகவல்!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவ கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. சென்னையில் பனிக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை அறிக்கை:
தமிழகத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பெய்ய தொடங்கிய வடகிழக்கு பருவமழை சென்னை, காஞ்சிபுரம், வேலூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த மழையின் அளவு ஜனவரி மாத தொடக்கத்தில் படிப்படியாக குறைந்து அதிக குளிர் நிலவத் துவங்கியது.
வளர்ந்து வரும் Chat GPT .. போட்டிக்கு குவியும் செயலிகள் – வேலைவாய்ப்பு, பொருளாதாரம் கேள்விக்குறி!
மேலும் காலை நேரங்களில் நிலவிய பனிமூட்டம் மற்றும் குளிரால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. குறிப்பாக நீலகிரி மற்றும் மலை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மூடுபனி நிலவியது. கடந்த ஆண்டுகளை விட நடப்பாண்டு குளிர் சற்று அதிகமாக இருந்ததாகவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாகவே தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழையின்றி வறண்ட வானிலையே நிலவி வருகிறது. தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் பிப்.12 முதல் 16ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். வெப்பநிலை 2 – 3 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும். மேலும் சென்னையை பொறுத்தவரை அதிகாலை லேசான பனி மூட்டத்திற்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.