தமிழகத்தில் வாகன ஆவணங்கள் செல்லுபடி காலம் டிச.31 வரை நீட்டிப்பு – உத்தரவு பிறப்பிப்பு!

0
தமிழகத்தில் வாகன ஆவணங்கள் செல்லுபடி காலம் டிச.31 வரை நீட்டிப்பு - உத்தரவு பிறப்பிப்பு!
தமிழகத்தில் வாகன ஆவணங்கள் செல்லுபடி காலம் டிச.31 வரை நீட்டிப்பு - உத்தரவு பிறப்பிப்பு!
தமிழகத்தில் வாகன ஆவணங்கள் செல்லுபடி காலம் டிச.31 வரை நீட்டிப்பு – உத்தரவு பிறப்பிப்பு!

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் மக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு பொது போக்குவரத்து வாகனங்களின் அனைத்து ஆவணங்களின் செல்லுபடியாகும் காலத்தை டிசம்பர் 31ம் தேதி வரை இறுதியாக நீட்டித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

அரசாணை வெளியீடு:

தமிழகத்தில் கடந்த ஆண்டு 2020 மார்ச் முதல் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவுகள் அமலில் இருந்து வருகிறது. முதல், இரண்டாம் அலை என்று மாறி மாறி தமிழகத்தை உலுக்கி வருகிறது. கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளினால் அரசின் அத்தியாவசிய துறைகள் மட்டுமே ஊரடங்கு காலங்களில் செயல்பட்டது. மேலும் தொழில் துறைகள் அனைத்தும் மூடப்பட்டதால் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால் அரசு பல செயல்பாடுகளின் அவகாச காலத்தை நீடித்து உத்தரவிட்டது. அந்த வகையில் போக்குவரத்து வாகனங்களின் ஆவணங்கள் செல்லுபடியாகும் காலம் கடந்த ஆண்டு முதல் பல முறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ATM பண பரிவர்த்தனைகளுக்கு ஜன.1 முதல் கூடுதல் கட்டணம் – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

தொற்று பரவல் காலத்தில் மக்களை சிரமப்படுத்த வேண்டாம் என்று இந்த முடிவு அரசால் நீட்டிக்கப்பட்டது. மேலும் ஆன்லைன் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் தமிழக அரசிடம் இது தொடர்பான கோரிக்கை ஒன்றை வைத்தார். அதவாது மேற்குவங்கம் மற்றும் டெல்லி போன்ற இடங்களில் பொது போக்குவரத்து வணகணங்களின் தகுதிச்சான்று புதுப்பித்தல், அனுமதிச்சீட்டு, ஓட்டுநர் உரிமம், வாகனப்பதிவு போன்ற ஆவணங்கள் அனைத்தும் செல்லுபடியாகும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதை போல் தமிழ்கத்திலும் போக்குவரத்து ஆவணங்களின் செல்லுபடி காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று தனது கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு – அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!

இந்த மனுதாரரின் கோரிக்கையினை ஏற்று கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியினை கருத்தில் கொண்டி பாதிக்கப்பட்ட மக்களின் நலன் கருதியும், வாகனங்களின் அனைத்து தகுதி சான்று புதுப்பித்தல், அனுமதிச்சீட்டு, ஓட்டுநர் உரிமம், வாகனப்பதிவு போன்ற ஆவணங்கள் செல்லுபடியாகும் காலத்தை டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டித்து அரசாணை வெளியிட வேண்டும் என்று போக்குவரத்து ஆணையர் அரசுக்கு கோரிக்கை வைத்தார். போக்குவரத்து ஆணையரின் கோரிகையினை ஏற்று அனைத்து ஆவணங்களின் செல்லுபடியாகும் காலத்தை டிசம்பர் 31ம் தேதி வரை இறுதியாக நீடிப்பதாக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!