ATM பண பரிவர்த்தனைகளுக்கு ஜன.1 முதல் கூடுதல் கட்டணம் – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!
2022 ஜனவரி 1ம் தேதி முதல் ஏடிஎம்களில் பணம் எடுக்க புதிய கட்டண விதிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. தற்போது பண பரிவர்த்தனை கட்டணம் ரூ.20 ஆக உள்ளது. இதனை ரூ.21 ஆக வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
கூடுதல் கட்டணம்:
தற்போது ஏ.டி.எம் பண பரிவர்த்தனைக்கான சேவை கட்டணங்களிலும் மாற்றங்கள் கொண்டு வரப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன் வருகிற ஜனவரி 1ம் தேதி முதல் ஏடிஎம்களில் பணம் எடுக்க புதிய கட்டண விதிமுறைகளை அமல்படுத்த உள்ளது. இதனை நாடு முழுவதும் அமல்படுத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஒவ்வொரு வங்கியும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட முறை ஏடிஎம்களில் பரிவர்த்தனை செய்ய இலவசமாக வழங்கும். அதனை தாண்டி பரிவர்த்தனை செய்தால் கட்டணம் வசூலிக்கப்படும். தற்போது பண பரிவர்த்தனை கட்டணம் ரூ.20 ஆக உள்ளது. இதனை ரூ.21 ஆக வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
உடல்நிலை மோசமான நிலையில் “சூரரைப் போற்று” நாயகி அபர்ணா பாலமுரளி? அவரே சொன்ன விளக்கம்!
இந்த இலவச பண பரிவர்த்தனை நகரங்களை பொறுத்து மாறுபடும். அதன்படி மெட்ரோ நகரங்களில் முதல் 3 முறை பண பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. மற்ற நகரங்களில் முதல் 5 முறை பண பரிவர்த்தனைக்கு இலவசமாக வழங்கப்படும். இதனை கடந்த ஜூன் 10 ஆம் தேதி அறிமுகப்படுத்தியது. தற்போது ஜனவரி 1 ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப் போவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதனை தொடர்ந்து SBI ஏடிஎம் கார்டு வைத்திருப்பவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்குகிறது.
தமிழகத்தில் டிச.20ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
அத்துடன் 10000-க்கு மேல் பண பரிவர்த்தனை செய்யும் போது வங்கி கணக்கில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP எண் அனுப்பப்படும். அதன் பிறகு OTP எண்ணை உள்ளிட்டால் மட்டுமே பணம் எடுக்க முடியும். ஆனால் இந்த வசதியை மற்ற வங்கி கிளைகளில் பயன்படுத்த முடியாது. இது ஏடிஎம்களில் ஏற்படும் மோசடிகளை குறைக்க உருவாக்கப்பட்டது. இதனை தொடர்ந்து SBI வங்கியானது புதிய உதவி மைய சேவை எண்ணை அறிவித்துள்ளது. இது முற்றிலும் TOLL FREE ஆக 1800 1234 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். மேலும் இதன் மூலம் வங்கியின் சேவைகள் மற்றும் சந்தேகங்கள் குறித்து கேட்டுக்கொள்ள முடியும்.