தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு – அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!

0
தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!
தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!
தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு – அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!

10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கண்டிப்பாக நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொதுத்தேர்வு குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று கூறியுள்ளார்.

பொதுத்தேர்வு அறிவிப்பு:

தமிழகத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு சற்றும் குறையாத பட்சத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது. கடந்த ஆண்டு கொரோனா தொற்றின் காரணமாக பொதுத்தேர்வு நடத்தப்படாமல் மாணவர்கள் தேர்ச்சி என்று முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்த ஆண்டும் அது தொடருமா என்ற கேள்வி இருந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் 10, 12 ஆம் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கண்டிப்பான முறையில் நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.

TNPSC குரூப் 4 VAO தேர்வுக்கான பாடத்திட்டம், கட்ஆப் மதிப்பெண்கள் – முழு விபரங்கள் இதோ!

9 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி முறையில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதை தொடர்ந்து சமீபத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜனவரி 3 ஆம் தேதி பள்ளிகள் சுழற்சி முறை இன்றி முழுவீச்சில் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நூலகத்தில் ஆய்வு செய்த அமைச்சர் அதன்பின் அளித்த பேட்டியில் 2,774 முதுகலை ஆசிரியர்களை அரசுப்பணிக்கு சேர்க்கும் திட்டத்தில் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடத்திய பின்பே காலிப்பணியிடம் பற்றி தெரியவரும் என்றும் விரைவில் நீட் தேர்வு தொடர்பாக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் ‘மேரா ரேஷன்’ செயலி – அறிந்து கொள்ள வேண்டிய அம்சங்கள்!

10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் மாணவர்களுக்கு ரிவிஷன் தேர்வு நடத்தப்படும். மாணவர்களுக்கு வகுப்பு, பாடங்கள் எந்த அளவு முடிக்கப்பட்டு இருக்குமோ அந்த கணக்கில் அடுத்த 2 மாதங்களில் பொதுத்தேர்வு நடத்தப்படும். மேலும் பள்ளிகளில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் தொற்று பரவாமல் இருக்க பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சுற்றறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. எனவே மாணவர்களும், ஆசிரியர்களும் அதை கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!