TN TRB தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கான போட்டித்தேர்வு ரத்து – அரசுக்கு கோரிக்கை!
தமிழகத்தில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றோர் நியமன தேர்வை எழுத வேண்டும் என்ற நடைமுறை உள்ளது. இதனை ரத்து செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆசிரியர் தகுதித் தேர்வு:
தமிழகத்தில் அனைத்து துறை அரசு பணிகளுக்கும் போட்டித் தேர்வு என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது அதிக தேர்வர்கள் எதிர்பார்த்த குரூப் 2, 2A தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் அடுத்ததாக குரூப் 4 தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று TNPSC தேர்வாணையம் தகவல் தெரிவித்துள்ளது. மற்ற துறை தேர்வுகளை தொடர்ந்து ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு நடத்தப்பட்டது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் மார்ச் 31க்குள் ரூ.90,000 ஆக உயர்வு? அகவிலைப்படி அப்டேட்!
இந்த நிலையில் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றொரு நியமன தேர்வை எழுதும் முறை நடைமுறையில் உள்ளது இதனை ரத்து செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு போட்டித் தேர்வு நடத்துவது வெயிட்டேஜ் முறையை விட கொடுமையானது. இதுவரை நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 60,000க்கும் மேற்பட்டவர்களுக்கு 9 ஆண்டுகளாக வேலை வழங்கப்படவில்லை.
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ அருண் பிரசாத் யார் தெரியுமா? ஷாக்கிங் தகவல்கள் இதோ!
இவர்களுக்கு பணி பெற வேண்டுமென்றால் மீண்டும் ஒரு தேர்வை எழுத வேண்டும் என்ற நிலையில் உள்ளனர். அதனால் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். ஆசிரியர் பணிக்கான வயது வரம்பை குறைந்தபட்சம் ஓராண்டு பணியாற்ற தகுதி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஓய்வு பெறும் வயதை 59 ஆக உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.