விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ அருண் பிரசாத் யார் தெரியுமா? ஷாக்கிங் தகவல்கள் இதோ!
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் பாரதி என்ற முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் அருண் பிரசாத்தின் சினிமா பயணம், சின்னத்திரை அறிமுகம் உட்பட ரசிகர்களுக்கு தெரியாத சில தகவல்களை இப்பதிவில் காணலாம்.
நடிகர் அருண்
தமிழ் சின்னத்திரை சீரியல்களின் டாப் ரேட்டிங் லிஸ்டில் இடம்பிடித்திருக்கும் ஒரு முக்கியமான சீரியல் எதுவென்றால் அது ‘பாரதி கண்ணம்மா’ தான். விஜய் டிவியில் பிரைம் நேரத்தில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் இந்த ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் மற்ற டிவி சேனல்களில் வெளியாகும் சூப்பர் ஹிட் சீரியல்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வருகிறது. ஏனென்றால் இந்த சீரியலுக்கு கிடைக்கும் வரவேற்புகள் அந்த அளவுக்கு அதிகம். இத்தொடரில் பாரதி என்ற முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகர் அருண் பிரசாத்.
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றவர்கள் கவனத்திற்கு – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
எப்போதும் ஆக்டிவாக, துறுதுறுவென்று இருக்கும் நடிகர் அருண் பிரஷாத் எந்தவொரு சினிமா பின்புலமும் இல்லாமல் திரைத்துறைக்குள் நுழைந்தவர். ஆரம்பத்தில் ஏகப்பட்ட தோல்விகள், ஏமாற்றங்களுடன் வாய்ப்புகளுக்காக அலைந்து திரிந்த அருணுக்கு இந்த ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ஏகப்பட்ட வரவேற்பையும், ரசிகர்களையும் பெற்று தந்திருக்கிறது. நடிகர் அருண் பிரசாத்தின் ஆரம்ப வாழ்க்கையை பற்றி பார்க்கையில், இவர் 1991ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் சேலம் மாவட்டத்தில் பிறந்திருக்கிறார்.
தமிழகத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அஞ்சல்துறையில் வேலைவாய்ப்பு – மாதம் ரூ.63,200 ஊதியம்!
சேலம் மாவட்டத்தில் உள்ள வித்யா மந்தீர் பள்ளியில் படிப்பை முடித்த அவர் சினிமா மீதுள்ள ஆர்வத்தினால் சென்னைக்கு வந்திருக்கிறார். அந்த வகையில் சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் விஸ்காம் படித்து வந்த போது நடிகர் அருண் பிரசாத் தனது நண்பர்களுடன் இணைந்து குறும்படங்களில் நடிக்க துவங்கினார். குறிப்பாக 50க்கும் மேற்பட்ட குறும்படங்களில் நடித்துள்ள அருண் பிரசாத்திற்கு மதி மயங்கினேன், நிகழ்காலம், கள்ளன், ஏனோ வானிலை மாறுதே போன்றவை சிறந்த அங்கீகாரத்தை பெற்று தந்தது.
இதில் நடிகை நக்ஷத்ராவுடன் அருண் நடித்திருந்த ஏனோ வானிலை மாறுதே என்ற குறும்படம் மூலம் ‘மேயாதமான்’ என்ற திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் எதிர்பார்த்த அளவுக்கு சினிமா வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. இருந்தாலும் இடைவிடாமல் முயற்சித்து வந்த நடிகர் அருண் பிரசாத்துக்கு இயக்குனர் பிரவீன் பென்னட் இயக்கத்தில் தயாரிக்கப்பட்டு வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியலில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வரும் நடிகர் அருண் பிரசாத் சிறந்த நடிகர் என்ற விருதையும் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.