தமிழகத்தில் 6 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – முதல்வர் இன்று ஆலோசனை!
தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து கொண்டே வரும் நிலையில் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பது மற்றும் 6 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் கொரோனா 2வது அலையால் தினசரி 35 ஆயிரம் வரை புதிய பாதிப்புகள் பதிவாகி வந்த நிலையில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. மறுபுறம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரமாக நடைபெற்றது. இதனால் தினசரி புதிய தொற்று எண்ணிக்கை 2 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. எனவே ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பி வருகிறது. இதனையடுத்து செப்.1ம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு உள்ளன. 9 முதல் 12ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு ஒரு வாரம் கடந்து விட்ட நிலையில் கொரோனா நிலவரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
TANGEDCO வேலைவாய்ப்பு 2021 – 10ஆம் வகுப்பு தேர்ச்சி | உதவித்தொகை: ரூ.8,100/-
இதனை கருத்தில் கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. அதன்படி செப்.15ம் தேதிக்கு பின்னர் அடுத்தகட்ட ஊரடங்கில் தளர்வுகள் அளிப்பது குறித்து முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று காலை 11.30 மணியளவில் ஆலோசனை நடத்த உள்ளார். இதில் உயர் அதிகாரிகள், சுகாதாரத்துறை நிபுணர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும் அடுத்தபடியாக 6 முதல் 8ம் வகுப்பு வரையில் பள்ளிகளை திறப்பது குறித்தும் முதல்வர் கருத்துகளை கேட்டறிய உள்ளார்.
புதுக்கோட்டையில் தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது!!
ஏற்கனவே சில பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து குறிப்பிட்ட பள்ளிகள் மூடப்பட்டு கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் பள்ளிகள் திறப்பில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்தாலோசனை நடைபெற உள்ளது. இக்கூட்டத்தின் முடிவில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் அடுத்தகட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் / தளர்வுகள் குறித்து இன்று மாலை அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றது.