தமிழகத்தில் 6 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – தனியார் பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை!!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மீண்டும் எப்போது திறக்கப்படும் என்கிற அறிவிப்பினை கல்வித்துறை விரைந்து வெளியிட வேண்டும் என தனியார் பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பள்ளிகள் திறப்பு:
கொரோனா நோய்த்தொற்று அச்சம் காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதத்தில் நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களின் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனை சரி செய்யும் பொருட்டு ஆன்லைன் முறையில் வகுப்புகள் எடுக்கப்பட்டது. அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி வாயிலாக பாடங்கள் நடத்தப்பட்டது. பின்னர் படிப்படியாக பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கிய மத்திய உள்துறை அமைச்சகம் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது.
தேசிய தகுதித்தேர்வு (NET) விண்ணப்ப பதிவு – நாளை (மார்ச் 9) இறுதி நாள்!!
அதனை பின்பற்றி பல்வேறு மாநில அரசுகள் பள்ளிகள் திறப்பு அறிவிப்பை வெளியிட்டன. முதற்கட்டமாக உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. தமிழகத்திலும் பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்கு பின்னர் கடந்த ஜனவரி 19ம் தேதி முதல் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் தொடங்கப்பட்டது. அதற்கடுத்து பள்ளிகளில் பெருமளவில் கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்படாத காரணத்தால் அடுத்த கட்ட நடவடிக்கைகளை அரசு எடுத்தது.
அதன்படி 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 8 முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது. தற்போது 9 முதல் 11ம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகளும் மே 3ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. ஏற்கனவே பொதுத்தேர்வு ரத்து அறிவிப்பு காரணமாக தனியார் பள்ளி ஆசிரியர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். இதனால் 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பை விரைந்து வெளியிட வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்