காலாண்டு முப்பருவ தேர்வுகள் ரத்து !!! – பள்ளி திறப்பு எப்போது ?????
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதனால் ஊரடங்கு அமலில் இருக்கிறது. எனவே கல்லூரி முதற்கொண்டு அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. தொற்றின் தாக்கம் குறையாததினால் தேர்வுகள் எல்லாம் தள்ளி வைக்கப்படும், ரத்து செய்ய பட்டும் வருகின்றது.
தமிழகத்திலும் கொரோனா தாக்கம் இன்னும் குறையாததினால் 10 ஆம் வகுப்பு தேர்வுகள் முதற்கொண்டு அனைத்து தேர்வுகளையும் ரத்து செய்து தமிழக அரசு அறிவிப்பினை வெளியிட்டு இருந்தது. மேலும் கொரோனாவின் தீவிரம் கல்வியாண்டு திறப்பிலும் தாக்கத்தினை ஏற்படுத்தியிருப்பதால் அதுகுறித்து ஆய்வு செய்ய கல்வித்துறை ஒரு குழுவினை அமைத்துள்ளது.
சிபிஎஸ்சி தேர்வுகள் ரத்தா ??? – நாளை மாலைக்குள் முடிவு
அதன் படி காலாண்டு தேர்வு ரத்து செய்யபடலாம். அதாவது செப்டம்பர் மாதம் வழக்கமாக நடைபெறும் காலாண்டு தேர்வை ரத்து செய்து, காலை மாலை என இரண்டு வேளை சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்துவது, பாடத்திட்டங்களை குறைப்பது, ஆன்லைன் வகுப்புகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது போன்ற பரிந்துரைகள் தற்போது பரிசீலிக்கப்படுகிறது.
முப்பருவ தேர்வுகள் ரத்து :
மேலும் ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, முப்பருவ பாடம் மற்றும் தேர்வுகளை ரத்து செய்யும்படி, பரிந்துரைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, காலாண்டு அல்லது முதல் பருவம், ஆகஸ்டில் முடியும் என்பதால், அப்போது தான் பள்ளிகளை திறக்க வாய்ப்புள்ளது.
எனவே, முதல் பருவ பாடங்களை தனியாக நடத்த முடியாது.எனவே, பருவத் தேர்வு மற்றும் அதற்கான பாட முறையை ரத்து செய்து விட்டு, பொதுவாக முக்கிய பாடங்கள் மற்றும் அடிப்படை தேவைக்கான கல்வியை வழங்க தீர்மானிக்கப்பட்டு உள்ளது.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |