தமிழ்நாடு அஞ்சல் வட்ட தேர்வுகளை தமிழில் எழுதலாம் – மத்திய அரசு அனுமதி !!!!

0
தமிழ்நாடு அஞ்சல் வட்ட தேர்வுகளை தமிழில் எழுதலாம் - மத்திய அரசு அனுமதி !!!!
தமிழ்நாடு அஞ்சல் வட்ட தேர்வுகளை தமிழில் எழுதலாம் - மத்திய அரசு அனுமதி !!!!

தமிழ்நாடு அஞ்சல் வட்ட தேர்வுகளை தமிழில் எழுதலாம் – மத்திய அரசு அனுமதி 

தமிழ்நாடு வட்டத்திற்குட்பட்ட அஞ்சல் அலுவலக தேர்வுகளை தமிழிலும் எழுதலாம் என மத்திய அரசு ஆனது தற்போது புதிதாக அனுமதி அளித்துள்ளது. இதனால் தமிழகத்தை சேர்ந்த தேர்வர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

தமிழ்நாடு அஞ்சல் வட்ட தேர்வுகள் :

தமிழ்நாடு வட்டத்திற்குட்பட்ட அஞ்சல் அலுவலக தேர்வுகள் மற்றும் ரயில், தபால் சேவை கணக்கர் தேர்வுகளுக்கான அறிவிப்பு கடந்த ஜனவரி 4 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில் தேர்வர்கள் ஆங்கிலம் மட்டும் இந்தியில் மட்டுமே தேர்வுகளை எழுத முடியும் என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அதற்கு தமிழக தேர்வர்கள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பியது.

இதனை தொடர்ந்து, மத்திய அரசுக்கு கடிதம் ஒன்று எழுதப்பட்டது. அதில் தேர்வுகளை தமிழில் நடத்துமாறு வலியுறுத்தப்பட்டது. அதற்கு இந்திய அஞ்சல் சேவை வாரியத்திடம் இருந்து பதில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழில் எழுதலாம் !!

இந்திய அஞ்சல் சேவை வாரியத்தின் அக்கடிதத்தில் தமிழ்நாடு வட்டத்திற்குட்பட்ட அஞ்சல் அலுவலக தேர்வுகள் மற்றும் ரயில், தபால் சேவை கணக்கர் உள்ளிட்ட வேலைகளுக்கான மையப்படுத்தப்படாத துறை வாரிய தேர்வுகளை இனி தமிழ் மொழியிலும் எழுதலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்வர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!