TN MRB சுகாதார ஆய்வாளருக்கான காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு – முக்கிய கோரிக்கை!
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகளை அரசு வெளியிட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது மருத்துவத்துறையில் உள்ள 673 சுகாதார ஆய்வாளர் பணியிடங்களை மருத்துவ தேர்வு வாரியம் மூலம் நிரப்ப வேண்டும் என்று தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் சங்க மாநில தலைவர் எஸ்.ஜெயக்குமார் கோரிக்கை வைத்துள்ளார்.
வேலைவாய்ப்பு:
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக பல்வேறு தொழில்களில் பாதிப்பு ஏற்பட்டது. அதனால் ஏராளமான இளைஞர்கள் தங்களின் வேலைகளை இழந்தனர். மேலும் அரசாலும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தர முடியாத நிலை இருந்தது. தற்போது தொற்று பரவல் குறைந்ததை அடுத்து வேலைவாய்ப்பு பற்றாக்குறை இல்லாத நிலையை உருவாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனை தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்பை அரசு உருவாக்கி வருகிறது. அத்துடன் அரசு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பி வருகிறது.
ரேஷன் கார்டில் புதிதாக திருமணமானவர்கள் பெயரை சேர்ப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
இதையடுத்து அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இதர மருத்துவ பணியாளர்களை தேர்வு செய்ய மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக தேர்வு நடத்தப்படுகிறது. தற்போது சுகாதார ஆய்வாளர்கள் பணியிடத்தில் உள்ள 673 காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் இது தொடர்பாக தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் சங்க மாநில தலைவர் எஸ்.ஜெயக்குமார் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
ரேஷன் கார்டில் புதிதாக திருமணமானவர்கள் பெயரை சேர்ப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
இதில் இவர் தெரிவித்ததாவது, சுகாதார ஆய்வாளர்கள் பணியிடத்தில் இருக்கும் காலிப்பணியிடங்களை மத்திய அரசு திட்டங்கள் மூலம் தற்காலிக அடிப்படையில் நிரப்ப கூடாது என்று கூறியுள்ளார். இந்த காலிப்பணியிடங்கள் மருத்துவ தேர்வு வாரியம் மூலம் நிரப்ப வேண்டும். மேலும் நர்சிங் டிரான்ஸ்பர் கவுன்சிலிங் பணியிடத்தில் உள்ள காலிப்பணியிடங்களும் கவுன்சிலிங் மூலம் நிரப்பப்பட வேண்டும் இரண்டாம் நிலை சுகாதார ஆய்வாளர் பணியிடத்திற்கும் தேர்வு வாரியம் மூலமாக காலிப்பணியிடங்கள் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளார்.