அரசுப்பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு – ஏப்ரல் 13 முதல் புதிய கல்வியாண்டு துவக்கம்!

0
அரசுப்பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு - ஏப்ரல் 13 முதல் புதிய கல்வியாண்டு துவக்கம்!
அரசுப்பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு - ஏப்ரல் 13 முதல் புதிய கல்வியாண்டு துவக்கம்!
அரசுப்பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு – ஏப்ரல் 13 முதல் புதிய கல்வியாண்டு துவக்கம்!

தற்போது சண்டிகர் மாநகரத்தில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு வரவிருக்கும் 2022-23ம் கல்வி ஆண்டிற்கான புதிய வகுப்புகள் ஏப்ரல் 13 ம் தேதி முதல் துவங்கும் என்று அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காண்போம்.

பள்ளிகள் திறப்பு:

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் வெகுவாக குறைந்திருக்கும் நிலையில் கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கொரோனா 3ம் அலைப்பரவலால் ஜனவரி மாதத்தில் ஒரு சில வாரங்கள் மட்டும் அடைக்கப்பட்ட பள்ளிகள் அனைத்தும் மீண்டுமாக திறக்கப்பட்டு ஆப்லைன் முறையில் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் சண்டிகர் மாநகரத்தில் கொரோனா பரவலால் மூடப்பட்ட பள்ளிகள் கடந்த பிப்ரவரி மாதம் முதல் மீண்டுமாக திறக்கப்பட்டுள்ளது.

12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் கவனத்திற்கு – மார்ச் 17 முதல் கொரோனா தடுப்பூசி!

இதற்கிடையில் நடப்பு கல்வியாண்டிற்கான வகுப்புகள் இன்னும் ஒரு சில மாதங்களில் முடிவுக்கு வர இருப்பதால் தேர்வுகளை நடத்தி முடிப்பதில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் சண்டிகர் நகரத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் புதிய கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஏப்ரல் 13ம் தேதி முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை, கொரோனா தொற்றுநோய்களின் போது குழந்தைகளுக்கு ஏற்படும் கற்றல் இழப்பை ஈடுசெய்ய சண்டிகர் கல்வித்துறை சிறிய திட்டங்களை தொடங்க இருக்கிறது.

IRCTC ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய திட்டமிடுவோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!

அந்த வகையில் புதிய கல்வியாண்டுக்கான பாடத்திட்டத்தை தொடங்குவதற்கு முன் குழந்தைகள் நன்றாக தயாராகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட கல்வி அதிகாரி பிரப்ஜோத் கவுர் கூறுகையில், ‘கொரோனா தொற்றுநோயின் கடந்த இரண்டு ஆண்டுகளில் மாணவர்களின் கல்வியில் பெரிய இடைவெளி உருவாக்கப்பட்டதால், இந்த முறை குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும். மாணவர்களை மதிப்பீடு செய்ய குறுகிய பிரிட்ஜ் படிப்புகள் நடத்தப்படும்’ என்று தெரிவித்திருக்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!