12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் கவனத்திற்கு – மார்ச் 17 முதல் கொரோனா தடுப்பூசி!

0
12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் கவனத்திற்கு - மார்ச் 17 முதல் கொரோனா தடுப்பூசி!
12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் கவனத்திற்கு - மார்ச் 17 முதல் கொரோனா தடுப்பூசி!
12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் கவனத்திற்கு – மார்ச் 17 முதல் கொரோனா தடுப்பூசி!

மத்திய அரசு கொரோனாவிலிருந்து சிறுவர்களை பாதுகாக்க ,நாளை மறுநாள் முதல் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று தெரிவித்து உள்ளது. இந்த முக்கிய தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டேவியா ட்விட் செய்து உள்ளார் .

நாளை மறுநாள் முதல் கொரோனா தடுப்பூசி:

உலகம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்திய கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி கடந்த ஆண்டு கண்டறியப்பட்டது. தற்போதைய சூழ்நிலையில் கொரோனா பாதிப்புக்கு முழுமையான தீர்வு கொரோனாவுக்கு தடுப்பூசி மட்டுமே. இந்த தடுப்பூசி முதலில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தப்பட்டு வந்தது. அடுத்த சில மாதங்களில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் செலுத்தப்பட்டு வந்தது. கொரோனா தடுப்பூசி இரண்டு தவணைகளில் போடப்பட்டு வருகிறது. கொரோனா தாக்கம் இன்னும் முழுமையாக குறையவில்லை, உருமாறிய வைரஸாக பரவி வருகிறது. இதனால் இந்த புதிய வைரஸ் தாக்கம் சிறுவர்களுக்கும் ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

ரேஷன் கார்டில் புதிதாக திருமணமானவர்கள் பெயரை சேர்ப்பது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

அதனால் குழந்தைகளை பாதுகாக்கும் விதமாக சிறுவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தவும், பூஸ்டர் டோஸ் போடவும் அனுமதி அளிக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையை கருத்தில் கொண்டு பிரதமர் மோடி, 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு ஜனவரி 3 முதல் தடுப்பூசி போடப்படும். 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், பிற நோய்களால் பாதிக்கப்பட்டு உள்ளவர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி ஜனவரி 10 முதல் தொடங்கும் என உத்தரவிட்டார். இந்த உத்தரவின் அடிப்படையில் கடந்த ஜனவரி மாதம் 10ஆம் தேதி முதல் 15 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – நேரம் மாற்றம், வயது வரம்பு தளர்வுகள்!

இதனை தொடர்ந்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டேவியா, முக்கிய தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த தகவல், மார்ச் 16ஆம் தேதி (நாளை மறுநாள்) முதல் 12 வயதுக்கு மேற்பட்ட சிறார்களுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் செலுத்தப்படும் என்று பதிவிட்டுள்ளார். மேலும் தற்போது அனைத்து நாடுகளில் கொரோனா தாக்கம் குறைந்து வரும் இந்த நிலையில் தற்போது சீனாவில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த பாதிப்பு கொரோனா 4வது அலையின் துவக்கமாக இருக்குமோ? என உலக நாடுகளை அச்சத்தில் உள்ளது. இதனால் சீனாவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த சூழலில் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது, இந்த அனுமதி மூலம் சிறுவர்கள் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!