தமிழகம் நாளை முதல் களைகட்ட போகுது.. நீங்களும் ரெடியா இருங்க – பொங்கல் பரிசின் டோக்கன் விநியோகம்!
தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்க உள்ள பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த தகவல்கள் வெளியான நிலையில், நாளை முதல் இதற்கான டோக்கன் விநோயோகம் தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.
பொங்கல் பரிசு டோக்கன்:
தமிழக அரசு 2023ம் ஆண்டிற்கான பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வரும் பொங்கல் பண்டிகைக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, இவற்றுடன் இலவச வேட்டி, சேலை போன்றவற்றை அளிக்க உள்ளார். இந்த தொகுப்புடன் மக்கள் மனதை புரிந்து கொண்டு ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 பரிசாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆபத்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு.. இந்தியாவில் புது வகை கொரோனா – கட்டுப்பாடுகள் தீவிரம்!
Exams Daily Mobile App Download
இப்பணிகள் அனைத்தும் ஜனவரி 2ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் தொடங்கப்பட உள்ளது. முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமை செயலகத்தில் திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். மேலும், பொங்கல் தொகுப்பை பெறுவதற்காக ரேஷன் கடைகளில் ஒரே நேரத்தில் மக்கள் கூட்டம் அலைமோதுவதை தடுக்கும் விதமாக, பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் நாளை (27.12.2022) முதல் வீடு வீடாக ரேஷன் கடை ஊழியர்கள் மூலமாக விநியோகம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.