அடுத்த ஆபத்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு.. இந்தியாவில் புது வகை கொரோனா – கட்டுப்பாடுகள் தீவிரம்!
மீண்டும் இந்தியாவில் தற்போது கொரோனா அச்சம் தொற்றி கொண்டுள்ளது. இந்தியா உள்பட உலக நாடுகள் பல தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தற்போது எடுத்து வருகிறது.
கொரோனா பரவல்:
சீனாவில் பிஎப் 7 தொற்று அதிக வேகத்தில் பரவி உயிர் பலி வாங்கி வருகிறது. அந்நாட்டு அரசு பல கட்டுப்பாடுகளை விதித்த போதிலும் அவை எதுவும் வேலைக்கு ஆகவில்லை. தற்போது அமெரிக்கா, தென் கொரியா, இந்தியா என அனைத்து நாடுகளையும் கொரோனா அச்சம் தொற்றி கொண்டுள்ளது. சர்வதேச பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை இந்திய விமான நிலையங்களில் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
இந்தியாவின் மத்திய அரசும் மாநில அரசுகளுக்கு நோய் தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட அறிவுறுத்தியுள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள ஆணையிட்டார். இந்நிலையில் கர்நாடகா மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை அவர்கள் கொரோனா தடுப்பு நிபுணர் மற்றும் அம்மாநிலத்தில் சுகாதாரத்துறையுடன் ஆலோசனை நடத்தினார்.
ஷாக் நியூஸ்.. தொடர் விடுமுறை எதிரொலி- தாறுமாறாக அதிகரிக்கப்பட்ட ஆம்னி பேருந்து கட்டணம்!
Exams Daily Mobile App Download
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து, “பள்ளி, கல்லூரி, தியேட்டர்கள், AC அறைகள் உட்பட அனைத்து இடங்களிலும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளார். இந்த புது வகை கொரோனா கூட்டம் அதிகம் இருக்கும் இடங்களில் எளிதாகவும் மிக வீரியமாகவும் பரவும் தன்மை கொண்டது. எனவே பள்ளி, கல்லூரி, தியேட்டர்களுக்கு செல்லும் மாணவர்கள், மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.