ஷாக் நியூஸ்.. தொடர் விடுமுறை எதிரொலி- தாறுமாறாக அதிகரிக்கப்பட்ட ஆம்னி பேருந்து கட்டணம்!
ஆம்னி பேருந்துகள் தொடர் விடுமுறை காலங்களில் அநியாய விலையில் கட்டண விற்பனையில் ஈடுபட்டு வருவது தெரிய வந்துள்ளது. இது குறித்து பொதுமக்கள் புகார் எழுப்பியுள்ளனர்.
ஆம்னி பேருந்து கட்டணம்:
தமிழக அரசு பண்டிகை மற்றும் திருவிழா போன்ற சமயங்களில் மக்கள் அதிக அளவில் பயணங்களை மேற்கொள்வதால், கூடுதல் எண்ணிக்கையில் பேருந்து மற்றும் ரயில் சேவைகளை வழங்குகின்றது. அரசு பேருந்துகளில் முன்பதிவு முறை இதனால் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் கடைசி நேரத்தில் பயணிக்கும் மக்கள் கூட்டம் அரசு பேருந்துகளில் இடம் கிடைக்காமல், தனியார் ஆம்னி பேருந்துகளில் பயணிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
Follow our Instagram for more Latest Updates
இதனை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகள் கட்டண கொள்ளையில் ஈடுபடுகின்றனர். இந்த விவகாரம் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, கட்டணம் குறித்து அரசு விதிமுறைகளை வகுத்துள்ளது. இருப்பினும், அவற்றை தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கேட்பதில்லை. இந்நிலையில், தற்போது அரையாண்டு விடுமுறை மற்றும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு காரணமாக தொடர் விடுமுறைகள் அளிக்கப்பட்டுள்ளது.
2023ல் ஞாயிற்று கிழமைகளில் வரும் பண்டிகைகள்.. வார நாட்களில் விடுமுறை அறிவிப்பு – வைரல் நியூஸ்!
Exams Daily Mobile App Download
இதனை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளில் தற்போது, அதிகட்சமாக 2, 3 மடங்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குறிப்பாக, மதுரை – சென்னை பயணத்திற்கு ரூ.2,900 ரூபாயும், கோவை – சென்னை செல்ல ரூ.3000, நெல்லை – சென்னைக்கு ரூ.3,500 முதல் ரூ.4,500 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், விடுமுறையின் ஆரம்பத்தில் சொந்த ஊர்களுக்கு பயணம் சென்றவர்கள் மீண்டும் பணி மற்றும் கல்வி நிமித்தமாக ஊர்களுக்கு ஜனவரி 1ம் தேதி திரும்ப வேண்டிய நிலை உள்ளதால் மக்கள் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளனர்.