தமிழக அரசு ஆசிரியர்கள், ஊழியர்களின் மாத சம்பள பட்டியல் – சர்வர் பிரச்சனையால் சிக்கல்!
தமிழகத்தின் நிதித்துறை அமைப்பின் சர்வர் பிரச்சனையால் டேட்டாக்களில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் சம்பள பட்டியல் தயாரிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சர்வர் பிரச்சனை
தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் பணியாற்றி வரும் அரசு ஊழியர்கள், அரசு மற்றும் அரசு உதவி புரியும் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் ஆகியோரின் சம்பள பட்டியல் மாதந்தோறும் 15 ஆம் தேதி அன்று கணக்கிடப்படும். அதன் பின்பு மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட தலைமை அதிகாரிகள் ஆகியோர்க்கு அனுப்பப்பட்டு சரிபார்க்கப்படும். அதன் பின் 25 ஆம் தேதிக்குள் அரசின் நிதித்துறை கட்டுப்பாட்டில் உள்ள கருவூலங்களில் உள்ள அதிகாரிகளுக்கு தாக்கல் செய்யப்படும்.
தமிழகத்தில் நவ.28 வரை கனமழை நீடிக்கும், மீனவர்களுக்காக எச்சரிக்கை – வானிலை அறிக்கை!
தற்பொழுது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களின் சம்பள தயாரிப்பு பட்டியலில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் கடந்த ஒரு வாரமாக தமிழக நீதித்துறையின் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டுள்ளது. இதனால் பதிவுகளை முறையாக மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நேற்று இணையதளம் செயல்பட துவங்கியது. ஆனால் ஏற்கனவே சேமித்து வைக்கப்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் சுய விவரக் குறிப்புகள் முழுமையாக காண்பிக்கப்படவில்லை.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பொங்கல் பரிசுத்தொகுப்பில் நெய்!
மேலும் இணையதளத்தில் சிலரின் டேட்டாக்கள் இருந்தாலும் சர்வர் பிரச்சனையின் காரணமாக அவர்களின் சம்பள பட்டியல் தயாரிக்க முடியவில்லை. இது குறித்து அரசு ஊழியர்கள் மாவட்ட கணக்கு அதிகாரியிடம் புகார் தெரிவித்தனர். அதற்கு சர்வர் பிரச்சனையின் காரணமாக சம்பள பட்டியல் தாமதமாகவே தயாரிக்கப்படும் என்று பதில் அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் மற்றும் அரசு ஆசிரியர்களுக்கு இந்த மாத சம்பளம் தாமதமாகவே கிடைக்கும் என்று கூறப்படுகிறது.