தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பொங்கல் பரிசுத்தொகுப்பில் நெய்!
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பில் இந்த வருடம் ஆவின் நெய் வழங்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அரசின் இந்த முடிவை ஆவின் நிர்வாகம் வரவேற்றுள்ளது.
ஆவின் நெய்:
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் மலிவு விலையில் அரிசி, பருப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய், போன்ற பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் விதிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச மளிகை தொகுப்பு, கொரோனா நிவாரணத் தொகை போன்றவைகள் வழங்கப்பட்டது. மேலும் இனிமேல் ரேஷன் கடைகளில் பனை வெல்லம் மற்றும் பயிறு வகைகளும் வழங்கப்படும் என்று மானியக் கோரிக்கை விவாதத்தின் போது தெரிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
TCS நிறுவனத்தில் BCA, B.Sc பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – விண்ணப்ப விவரங்கள் இதோ!
ஆண்டு தோறும் தமிழகத்தில் மக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் வைப்பதற்கு தேவையான பொருட்கள் இலவச வேட்டி, சேலை, கரும்பு போன்ற பொருட்கள் வழங்கப்படும். மேலும் சிறப்பு பரிசுத் தொகையும் வழங்கப்படும். ஆனால் இந்த வருடம் பரிசுத்தொகை எதுவும் அறிவிக்கப்படவில்லை. ஏற்கனவே குடும்ப தலைவிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள 1000 ரூபாய் உதவித்தொகை திட்டத்தை பொங்கல் தினத்தன்று முதல்வர் தொடங்கி வைப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை அறிவிப்பு – 53 மாணவர்களுக்கு கொரோனா உறுதி!
இந்த நிலையில் இந்த வருட பொங்கல் பரிசாக 21 வகை பொருட்கள் அடங்கிய பரிசுத்தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 100 மிலி ஆவின் நெய்யும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பை ஆவின் நிர்வாகம் வரவேற்றுள்ளது. மேலும் மக்களுக்கு வழங்குவதற்காக 100 மி.லி. அளவில் மொத்தம் 2 கோடியே 15 லட்சம் நெய் பாட்டில்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றனர். இதனால் ரேஷன் அட்டைதாரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.