தமிழக நிறுவனங்களுக்கு ஏப்ரல் 6ல் ஊதியத்துடன் விடுமுறை – தொழிலாளர் ஆணையர் உத்தரவு!!
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அன்றைய தினம் அனைத்து நிறுவனங்களும் பணியாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என தொழிலாளர் ஆணையர் அவர்கள் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
ஊதியத்துடன் விடுமுறை:
தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் பணிகள் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், மே 2 இல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நடப்பு ஆண்டும் ஒரு கட்டமாக தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் வேட்புமனு தாக்கல், பிரச்சாரம், தேர்தல் அறிக்கை என தமிழக அரசியல் களம் பரபரப்புடன் காணப்படுகிறது.
நீட் தேர்வுகள் ஒரே ஒரு முறை மட்டுமே நடத்தப்படும் – மத்திய அரசு அறிவிப்பு!!!
மேலும் 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தும் வகையில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் வாக்குப்பதிவு நடைபெற உள்ள ஏப்ரல் 6ம் தேதி மாநிலத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களும் தங்களது தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக தொழிலாளர் ஆணையர் அவர்கள் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது,
TN Job “FB Group” Join Now
1951 மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 135பி இன் அடிப்படையில் வாக்குப்பதிவு நடைபெறும் நாளில் நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். மேலும் அனைவரும் வாக்களிப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தும் வகையில் தற்காலிக, ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் தினக்கூலி உட்பட அனைத்து பணியாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டு உள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்