தமிழக தனியார் பள்ளிகளுக்கு முக்கிய அறிவிப்பு – பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து கடந்த பிப்ரவரி 1ம் தேதி அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் செலுத்தாமல் இருக்கும் மாணவர்கள் பள்ளிக்கு வருகை தருவதை உறுதிபடுத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தனியார் பள்ளிகள்
தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து அரசு பல்வேறு தளர்வுகளை வழங்கி வருகிறது. இதில் குறிப்பாக மாணவர்களின் கல்வி நலன் கருதி கடந்த பிப்ரவரி 1ம் தேதி அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி நேரடி வகுப்புகள் வழக்கம் போல நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக அனைத்து மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.
அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? பிரதமர் மோடிக்கு ஆலோசனை!
தற்போது கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பொதுத் தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து மாணவர்களுக்கும் மே மாத இறுதியில் பொதுத்தேர்வு முடிவடைகிறது. இந்த நிலையில் தனியார் பள்ளிகளில் அதிக கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுவதால் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பத்தை சேர்ந்த மாணவர்களால் கட்டணத்தை செலுத்த முடிவதில்லை. இதனால் கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவர்கள் வகுப்பறையை விட்டு வெளியில் அனுப்பப்படுகிறார்கள்.
இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. அத்துடன் கல்வி கட்டணம் செலுத்த முடியாத மாணவர்களின் படிப்பும் மனநிலையும் பாதிக்காதவாறு தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இதில் கூறியதாவது, கல்வி கட்டணத்தை செலுத்தாத மாணவர்கள் வகுப்பறையை விட்டு வெளியில் அனுப்புவது மற்றும் மாணவர்களின் பெற்றோர் பற்றி தரக்குறைவாக பேசுவது உள்ளிட்டவை எங்கள் பள்ளியில் நடைபெற வில்லை என்று சான்றளிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதில் பள்ளியில் உள்ள நிர்வாகிகள் உறுதியளித்து கையெழுத்திட வேண்டும் என்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.